இந்து தர்மத்தின் ஏழு மோட்ச நகரங்கள்:
ஒப்புவமையற்ற நமது இந்து தர்ம சாத்திரங்கள் சப்தபுரி எனும் ஏழு புராதனமான ஷேத்திரங்களை முத்தித் தலங்கள் என்று போற்றுகின்றது, அவை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்த அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், காசி எனும் வாரணாசி, தமிழகப் பகுதியிலுள்ள காஞ்சீபுரம், அவந்திபுரம் எனும் உஜ்ஜையினி, ஸ்ரீகிருஷ்ணன் அரசாட்சி புரிந்து வந்த துவாரகை. இந்து தர்மத்தினை இன்னுயிரெனப் பின்பற்றுவோர் இவ்வேழு தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்வதைத் தம்முடைய வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருப்பர் (சிவ சிவ)!!!
சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (மதங்கள் பொய்யா ? சில நுட்பமான விளக்கங்கள்):
வள்ளலார் திருவருட்பாவில் 'மதமும் சமயமும் பொய்' என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரான சிவபெருமான் தனக்கு உணர்த்தியதாகப் பதிவு செய்கின்றார், 'தெய்வ மணி மாலை' எனும் பாடல் தொகுப்பிலும் 'மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்' என்று கந்தக் கோட்ட முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார். மிகவும் நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டிய வாக்கியமிது. 'மதம்' எனும் பதத்திற்கு என்ன பொருள் கொள்வது? மனிதனை உயர் நிலை ஞானத்துக்கு இட்டுச் செல்லவும், இறைவனை அடைவிக்கவுமாய் வழிவழியாய் நம் சமயச் சான்றோர் பின்பற்றியும் வழிமொழிந்தும் வந்துள்ள கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளையே மதம் என்று பொதுவில் குறிக்கின்றோம்.
வள்ளலாரின் கோட்பாடுகளும் இதே நோக்கங்களையே முன்வைக்கின்றது அவ்விதமிருக்க 'மதம் பொய்' என்று வள்ளலார் குறிப்பதன் உட்கருத்து தான் என்ன? மதம் என்ற பதத்துக்குச் 'செருக்கு' என்றொரு பொருளுமுண்டு, அதீதமான; மித மிஞ்சிய நிலையையும் அது சுட்டுகின்றது, இனி மதங்களின் பெயரால் நடந்தேறும் முறைகேடுகளைக் காண்போம்.
பல தெய்வ வடிவங்களின் வழிபாடு நிலவி வரும் ஒரு மதத்தில், ஒவ்வொரு வடிவத்தின் உபாசகரும் பிற தெய்வ வடிவங்களைக் கடுமையாக நிந்திப்பது; மதம் அறிவுறுத்தும் தர்மங்களைப் பின்பற்றுவதை விடுத்து எந்நேரமும் சமய வாதங்களைப் புரிந்து கொண்டிருப்பது; அம்மதத்தின் மற்ற பிரிவினரைக் கடுமையாக விமரிசிப்பது அல்லது இகழ்வது;
மற்றொரு புறம் பிற மதங்களின் தெய்வங்களை மிகவும் தரக் குறைவாகப் பேசியும், கோடிக்கணக்கில் பணத்தை வாரியிரைத்தும் மதமாற்றத்தில் ஈடுபடுவது; பிற மதங்களின் தத்துவங்களைத் தாங்களே உருவாக்கியது போல் போலியாகச் சித்தரித்துப் பிரச்சாரம் செய்வது; சேவை நிறுவனங்கள் எனும் போர்வையில் பற்பல மருத்துவ மனைகளை உருவாக்கி முழுநேர மதமாற்றத்தில் ஈடுபடுவது; வீடு வீடாகச் சென்று பிற மதத் தெய்வங்கள் சாத்தான்கள் என்று பிதற்றித் திரிவது; தங்கள் கடவுள் மட்டுமே சுவர்க்கம் அளிப்பவர்; மற்ற மதத்தினர் நரகம் செல்வர் என்று மனநோய் கொண்டு பேசித் திரிவது; பிற மத தெய்வங்களைப் போலவே தங்கள் தெய்வத்தையும் வடிவமைத்துக் குழப்பிப் பின் மதமாற்றுவது; அரசியல் பலம் மூலம் வற்புறுத்தி மதமாற்றுவது;
பிற மதத்து ஆண் மற்றும் பெண்களைக் காதல் எனும் வலையில் சிக்க வைத்துப் பின் மதமாற்றுவது; மற்ற மதத்தினரைக் கொல்வதே இறைவனுக்குப் புரியும் பெரும் தொண்டு என்று வரைமுறையற்ற வன்முறையில் ஈடுபடுவது; பிற மதச் சின்னங்களை அடியோடு அழிப்பது; பிற மத வழிபாட்டுத் தளங்களைத் தகர்ப்பது; பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலை மிரட்டல் மூலம் மதமாற்றம் புரிவது;
மேற்கூறப்பட்ட செயல்களனைத்தும், மதம் என்ற எல்லையைத் தாண்டி மித மிஞ்சிய நிலையில் புரியப்படும் சகிக்க முடியாத முறைகேடுகள் ஆகும். பிற உயிர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்காமல் ஞானப் பாதையில் பயணிப்பதே மதத்தைப் பின்பற்றுபவரின் மேலான நோக்கமாக இருத்தல் வேண்டும்.
அகிம்சையை முன்னிருத்தும், சரியான கோட்பாடுகளோடு கூடிய ஒரு மதம் சர்வ நிச்சயமாய் மனித இனத்தை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். பரம புண்ணியமான நம் பாரத தேசத்தில் எண்ணிறந்த அருளாளர்களும்; ஞானிகளும்; ஆச்சாரியர்களும் உத்தமமான நமது இந்து தர்மத்தினைப் பின்பற்றியே பிறவாப் பெருநிலையினை எய்தியுள்ளனர். வள்ளலார் மதங்களைக் கண்டிக்கவில்லை, மதங்களின் பெயரால் நடந்தேறும் இத்தகு முறைகேடுகளையே 'பொய்' என்று நிந்திக்கின்றார் (சிவ சிவ)!!!
வியாசர் எத்தனை வியாசரோ?
'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்பது பொருள். 'வியாசர்' என்பது பதவியைக் குறிக்க வந்த பதம், வியாசம் செய்பவர் 'வியாசர்'.
சதுர்யுகம் என்று குறிக்கப் பெறும் கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களில், துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை 'ரிக், யஜூர், சாம, அதர்வனம்' எனும் நான்காக பகுத்தளிப்பார், அந்த தவசீலரே 'வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.
71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடந்தேறி வருவது வைவஸ்வத மன்வந்திரத்தின் 28ஆம் சதுர்யுகமாகும், 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாச' பதவியை வகித்து வந்துள்ளனர், இவர்களின் பெயர்களையும் வரலாற்றையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகின்றது. இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' என்பார் 'வேத வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.
18 புராணங்கள்; எண்ணிறந்த உப புராணங்கள்; மகாபாரதம்; பிரம்ம சூத்திரம் ஆகியவைகளை வடமொழியில் அருளியுள்ளார் வேத வியாசர்.
சதுர்யுகம் என்று குறிக்கப் பெறும் கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களில், துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை 'ரிக், யஜூர், சாம, அதர்வனம்' எனும் நான்காக பகுத்தளிப்பார், அந்த தவசீலரே 'வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.
71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடந்தேறி வருவது வைவஸ்வத மன்வந்திரத்தின் 28ஆம் சதுர்யுகமாகும், 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாச' பதவியை வகித்து வந்துள்ளனர், இவர்களின் பெயர்களையும் வரலாற்றையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகின்றது. இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' என்பார் 'வேத வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.
18 புராணங்கள்; எண்ணிறந்த உப புராணங்கள்; மகாபாரதம்; பிரம்ம சூத்திரம் ஆகியவைகளை வடமொழியில் அருளியுள்ளார் வேத வியாசர்.
காவடி என்றால் என்ன? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை' தொகுப்பிலிருந்து)
(கேள்வி): காவடி என்றால் என்ன? அதன் உட்கருத்து யாது?
(பதில்): சூரபத்மனுடைய ஆசிரியன் இடும்பன், அவன் அகஸ்தியருடைய ஏவலின்படி கயிலாயத்திலிருந்து சிவமலை, சக்தி மலை என்ற இரு மலைகளையும் காவடியாகக் கட்டிக் கொண்டு வந்தான். அதுமுதல் காவடி வழிபாடு ஏற்பட்டது. பாரமான பொருளை இரண்டாகப் பிளந்து தோளில் சுமந்து வருவதற்குக் காவடி என்று பொருள். பாவச் சுமைகளை ஆண்டவன் திருவடியில் அர்ப்பணித்து விடுவதே இதன் உட்பொருள்.
(குமுதம் வினா விடை (பக்கம் 139), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):
(பதில்): சூரபத்மனுடைய ஆசிரியன் இடும்பன், அவன் அகஸ்தியருடைய ஏவலின்படி கயிலாயத்திலிருந்து சிவமலை, சக்தி மலை என்ற இரு மலைகளையும் காவடியாகக் கட்டிக் கொண்டு வந்தான். அதுமுதல் காவடி வழிபாடு ஏற்பட்டது. பாரமான பொருளை இரண்டாகப் பிளந்து தோளில் சுமந்து வருவதற்குக் காவடி என்று பொருள். பாவச் சுமைகளை ஆண்டவன் திருவடியில் அர்ப்பணித்து விடுவதே இதன் உட்பொருள்.
(குமுதம் வினா விடை (பக்கம் 139), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):
இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் பற்றி? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை' தொகுப்பிலிருந்து):
(கேள்வி): இந்து மதத்தையும் இந்து மதக் கடவுள்களையும் தாறுமாறாகத் தாக்கும் கும்பல்களை எதிர்த்துத் தாங்கள் போராட்டம் நடத்தினால் என்ன?
(பதில்): நமது அநாதியான இந்து மதத்தையும் தெய்வங்களையும் அறியாமையால் எதிர்ப்பவர்களுக்கு என் எழுத்தாலும், உரையாலும் விடை கூறி வருகிறேன். நமது சமயத்திற்கு ஒரு போதும் ஆபத்து வராது, சூரியனைக் கருமேகம் மறைப்பது போல் என உணர்க!!!
(குமுதம் வினா விடை (பக்கம் 53), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):
(பதில்): நமது அநாதியான இந்து மதத்தையும் தெய்வங்களையும் அறியாமையால் எதிர்ப்பவர்களுக்கு என் எழுத்தாலும், உரையாலும் விடை கூறி வருகிறேன். நமது சமயத்திற்கு ஒரு போதும் ஆபத்து வராது, சூரியனைக் கருமேகம் மறைப்பது போல் என உணர்க!!!
(குமுதம் வினா விடை (பக்கம் 53), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):
இராமாயணமும் மகாபாரதமும் உண்மையா? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை தொகுப்பிலிருந்து'):
(கேள்வி): திருவனந்தபுரத்தில் ஒரு சொற்பொழிவாளர் இராமாயணமும் பாரதமும் நடந்த கதைகள் அல்ல, வியாசருக்கும் வால்மீகிக்கும் மானசீகமாக நடந்தவைகள் தான். இப்படி இராமரும், கிருஷ்ணரும் மனிதர்களாக இந்த உலகத்தில் பிறந்ததாகச் சொல்லும் எல்லாரும் ஊரை ஏமாற்றுகிறார்கள்' என்று சொல்கின்றார். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
(பதில்): இராமாயணமும் மகாபாரதமும் உண்மையில் நடந்த வரலாறுகள் தான். இராமாயண வரலாற்றை புறநானூறு அகநானூறு பரிபாடல் முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன.
-
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரப் பிரபந்தம் முதலிய அருள் நூல்கள் கூறுகின்றன.
"அடுத்தானை உரித்தானை அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை" - தேவாரம்
திருக்குரான் பொய் கூறுகின்றது என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறுவாரா? பைபிள் பொய் கூறுகின்றது என்று ஒரு கிறித்துவர் கூறுவாரா? கூறமாட்டார் அல்லவா?
ஆகவே, இறைவனை நேரில் கண்ட பரம ஞானிகள் திருவாய் மலர்ந்த தேவாரம், திருப்புகழ், பிரபந்தங்களில் பேசப்படுகின்ற இராமாயணமும், பாரதமும் கட்டுக் கதையென்று கூறுவது 'என் தாய் விபச்சாரி' என்று கூறுவதோடு ஒக்கும்.
(பக்கம் 137, குமுதம் வினா விடை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):
(பதில்): இராமாயணமும் மகாபாரதமும் உண்மையில் நடந்த வரலாறுகள் தான். இராமாயண வரலாற்றை புறநானூறு அகநானூறு பரிபாடல் முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன.
-
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரப் பிரபந்தம் முதலிய அருள் நூல்கள் கூறுகின்றன.
"அடுத்தானை உரித்தானை அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை" - தேவாரம்
திருக்குரான் பொய் கூறுகின்றது என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறுவாரா? பைபிள் பொய் கூறுகின்றது என்று ஒரு கிறித்துவர் கூறுவாரா? கூறமாட்டார் அல்லவா?
ஆகவே, இறைவனை நேரில் கண்ட பரம ஞானிகள் திருவாய் மலர்ந்த தேவாரம், திருப்புகழ், பிரபந்தங்களில் பேசப்படுகின்ற இராமாயணமும், பாரதமும் கட்டுக் கதையென்று கூறுவது 'என் தாய் விபச்சாரி' என்று கூறுவதோடு ஒக்கும்.
(பக்கம் 137, குமுதம் வினா விடை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):
இந்து தர்மத்தின் வேதங்கள் நான்கா மூன்றா ? (திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கம்):
வேதம் விழுமியது; வித் என்றால் அறிவு, வேதம் அறிவுநூல் எனப்படும். "அறிவுநூல் கல்லா மூடர்" என்பார் அருணகிரிநாதர். அவ்வேதம் நான்கு எனப்படும். அவற்றுள் நான்காவது அதர்வணம் மற்ற மூன்றின் திரட்டு. ஆதலின், இருக்கு (ரிக்), யசுர் (யஜுர்), சாமம் என்னும் மூன்றுமே சிறந்தவை. அதனால், வேதம் 'த்ரயீ' என்று பேசப் பெறுகின்றது.
வேதம் மூன்றனுள் இடையில் உள்ளது யஜுர் வேதம். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் இடையில் உள்ள காண்டத்துள் 11 அணுவாகங்களை உடையது திருஉருத்திரம் (ஸ்ரீருத்ரம்). இதன் இடையில் ஸ்ரீபஞ்சாட்சரமும் (நமசிவாய) அதன் இடையில் 'சி'காரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாட்சரமாகும். வேதத்தின் கண் திருஉருத்திரம். கண்மணி திருஐந்தெழுத்து என்ப.
(ஆதார நூல், பெரிய புராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், உருத்திர பசுபதி நாயனார் புராணம், பக்கம் 255)
வேதம் மூன்றனுள் இடையில் உள்ளது யஜுர் வேதம். அது ஏழு காண்டங்களை உடையது. அதன் இடையில் உள்ள காண்டத்துள் 11 அணுவாகங்களை உடையது திருஉருத்திரம் (ஸ்ரீருத்ரம்). இதன் இடையில் ஸ்ரீபஞ்சாட்சரமும் (நமசிவாய) அதன் இடையில் 'சி'காரமும் விளங்குகின்றது. வேத இதயம் சிவபஞ்சாட்சரமாகும். வேதத்தின் கண் திருஉருத்திரம். கண்மணி திருஐந்தெழுத்து என்ப.
(ஆதார நூல், பெரிய புராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், உருத்திர பசுபதி நாயனார் புராணம், பக்கம் 255)
Subscribe to:
Comments (Atom)






