இராமச்சந்திர மூர்த்தி தென்னாட்டு தெய்வமா வடநாட்டு தெய்வமா? கவிச் சக்கரவர்த்தியின் விடை:

மரண வேதனையிலிருக்கும் வாலி தன் மார்பினைத் துளைத்து நிற்கும் அம்பில் 'இராம' எனும் திருநாமம் பொறித்திருத்தலைக் காண்கின்றான், இதனைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் பின்வரும் அற்புதத் திருப்பாடலால் காட்சிப்படுத்துகின்றார்.

கம்ப இராமாயணம்: வாலி வதைப் படலம்:
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்.

பாரத தேசத்திற்குள்ளாகவே வடநாட்டு தெய்வம்; தென்னாட்டு தெய்வம் என்று பிரிவினை வெறி கொண்டு பிதற்றித் திரிவோருக்குப் பதில் கூறுமாற் போலே இத்திருப்பாடல் அமைந்துள்ளது. 'மும்மை' எனும் பதம் 'பூமி; பூமிக்கு மேலுள்ள 6 உலகங்கள்; பூமிக்கு கீழேயுள்ள அதல விதல...பாதாளம் வரையிலான 7 உலகங்கள்' இவையாவையுமே ஒருசேரக் குறிக்க வந்தது. ஆதலின் ஈரேழு பதினான்கு புவனங்களுக்கும் 'இராம' என்பது ஒப்புவமையற்ற மூல மந்திரமாகத் திகழ்கின்றது என்று போற்றித் துதிக்கின்றார் கவிச் சக்கரவர்த்தி (சிவ சிவ!!!).

1 comment:

  1. Play Slots at Del Webb Hotel & Casino - DRM CD
    Visit the Del Webb Casino, a Las Vegas, Nevada casino with everything you need 울산광역 출장안마 to 영천 출장샵 relax and unwind, and learn all 안양 출장마사지 about 경기도 출장샵 the casino. 나주 출장안마

    ReplyDelete