கலியுக முடிவில் பிரளயம் வருமா? வராது, கலியுகத்தின் கால அளவு 4,32,000 ஆண்டுகள், தற்பொழுது அதில் சுமார் 5100 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 4,27,000 ஆண்டுகள் கடந்த பின்னர் மீண்டும் முதல் யுகமான கிருத யுகம் (சத்திய யுகம்) துவங்கப் பெறும்.
சதுர்யுகம் என்று குறிக்கப் பெறும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களின் மொத்தக் கால அளவு (4:3:2:1 விகிதாச்சாரத்தில்) 43,20,000 (43 லட்சத்து 20 ஆயிரம்) ஆண்டுகள். இக்கால அளவில் 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம்.
சரி! மன்வந்திரத்தின் முடிவில் பிரளய நிகழ்வு நடந்தேறுமா? அதுவும் இல்லை. இத்தகைய 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு கல்பம் என்று குறிக்கப் பெறும் (சுமார் 1000 சதுர் யுகங்கள்).
அப்பொழுது கல்பத்தின் இறுதியில் தான் பிரளயமா எனில் ஆம், 14 மன்வந்திரங்கள் அல்லது 1000 சதுர்யுகங்களைக் கொண்ட ஒரு கல்பத்தின் முடிவில் நிகழ்ந்தேறும் பிரளயத்தில், 14 உலகங்களில் பூமி மற்றும் அதற்கு மேலுள்ள 2 உலகங்கள் மட்டும் முழுவதுமாக அழிவுறும். இது பிரம்மாவின் ஒரு நாளுடைய முதல் பகுதி என்று சாத்திரங்கள் குறிக்கின்றது, அந்நாளின் இரண்டாம் பகுதி முழுவதும் பிரளயம் நீடித்திருக்கும் (அதாவது 432 கோடி வருடங்களுக்கு). பின் மீண்டும் மறுநாள் காலை பூமி முதலான மூன்று உலகங்களுக்கும் படைப்பு துவங்கப் பெறும்.
இவ்விதமாய் தற்பொழுதுள்ள பிரம்மாவுக்கு 50 ஆண்டுகள் கடந்துள்ளது (அதாவது இரண்டு கல்ப கால அளவினைக் கொண்ட ஒரு நாள் மாதமாகி, அம்மாதங்கள் பன்னிரண்டு கடந்து ஒரு வருடமாகி, அவ்வருடங்கள் நூறினைக் கொண்டது பிரமனின் ஆயுள்). பிரமனின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் என்று குறிக்கப் பெறும். தற்பொழுது நடந்தேறி வருவது இரண்டாம் பரார்த்தத்தின் முதல் கல்பமான சுவேத வராக கல்பம், அதன் 14 மன்வந்திரங்களில் தற்பொழுது நடைபெறுவது 7ஆம் மன்வந்திரம், அதன் 71 சதுர்யுகங்களுள் தற்பொழுது நடந்தேறி வருவது 28ஆம் சதுர்யுகம், அதன் நான்கு யுகங்களில் கலியுகம், அதன் 4,32,000 ஆண்டுகளில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது.
பிரமனுக்கு 100 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் 14 உலகங்களும் மகாப்பிரளயத்தில் முற்றிலுமாய் அழிவுறும், பிரமன் சிவமுத்தி அடைவார். இம்மகா பிரளயம் காலவரையின்றி நீண்டிருக்கும், பின் புதியதொரு பிரமன் (மேற்குறித்துள்ள யுககணக்குகளின் வண்ணம்) படைப்புத் தொழிலையேற்று நடத்தி வருவார்.
கிரக வழிபாடுகளும் பரிகாரங்களும் அவசியமா?
எண்ணில் பலகோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள, நல்வினை; தீவினைக் குவியல்களை சஞ்சித வினைகளென்றுச் சாத்திரங்கள் பேசுகின்றன. பிறவியெடுக்கும் ஒரு ஆன்மாவானது அப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டிய, சஞ்சித வினைகளினின்றும் எடுக்கப் பெறும் ஒரு சிறு பகுதியே 'பிராரப்த வினை' என்று குறிக்கப் பெறுகின்றது.
நமது பிராரப்த வினைகளாலேயே நன்மை - தீமைகள் விளைகின்றனவேயன்றி கிரகங்களால் ஒருபொழுதும் அல்ல; அல்ல;அல்ல எனும் தெளிவான புரிதல் முதலில் அவசியமாகின்றது. 'அவ்வினைக்கு இவ்வினை' என்பார் திருஞானசம்பந்த மூர்த்தி. ஆன்மாக்களின் பிராரப்த வினைகளை உரிய காலத்தில், உரிய விதத்தில் சேர்ப்பிக்கும் நவ கோள்களும் 'அஞ்சலைத் தக்கோரிடத்துச் சேர்ப்பிக்கும்' தபால்காரரைப் போன்றவைகளே. வழிபாடுகளை ஏற்று, தீய பலன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவனால் இக்கோள்களின் அதிதேவதைகளுக்கு வழங்கப் படவில்லை.
குறிப்பிட்ட ஒரு கிரகம் நம்முடைய ராசிக்குச் சாதகமல்லாத கட்டமொன்றிற்கு வருமாயின் நமது பிராரப்த வினைகளிலிருந்துத் தீவினைப் பயன்களை மிகுதியாகவும், சாதகமான கிரகச் சூழலில் நல்வினைப் பயன்களை மிகுதியாகவும் நம்மை நுகருமாறுச் செய்வதே கோள்களின் பணியாகும். அது விடுத்து, நம் பிராரப்த வினைகளுக்குத் தொடர்பில்லாத புதியதொரு நல்வினை; தீவினையை கிரகங்களால் என்றுமே நூதனமாக உருவாக்கித் தந்துவிட இயலாது.
சனி கெடுப்பார்; குரு கெடுப்பார் என்று கூறி வருவதே பிழையான பிரயோகம், நாம் புரிந்து வந்துள்ள எண்ணிறந்த தீவினைகளே நம்மைத் தொடர்ந்து வந்து கெடுக்கின்றன என்று அவ்வப்பொழுது நினைவு கூர்தல் அவசியம்.
ஒன்பது நவகிரகத் திருத்தலங்களும் அடிப்படையில் சிவ ஷேத்திரங்களே, இத்தலங்களில் சிவபரம்பொருளை வழிபடுவதால் தோஷ நிவாரணம் கிட்டுமேயன்றிக் கிரக வழிபாட்டினால் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை. நம்மைப் போன்றே கிரங்கங்களின் அதிதேவதைகளுக்கும் ஆயுட்கால வரையரை உண்டு, அதன் பின்னர் புதியதொரு அதிகாரி அந்தந்த கிரங்கங்களுக்கு இறைவனால் நியமிக்கப் பெறுவார்.
*
பெயர்ச்சியன்று மட்டும் ஆலய வழிபாடு புரிந்து விட்டு பிற நாட்களில் நம் வாழ்வியல் முறைகளில் வேறெந்த விதமான மாறுதல்களையும் கொண்டு வரவில்லையெனில் எவ்வித அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
சாதகமல்லாத பெயர்ச்சிக் காலத்தில் நாம் பதறுவது ஒரு புறமிருக்கட்டும், 'எதனால் நமக்குத் தீவினைகள் வருகின்றன? சாத்திரங்கள் எந்தெந்த செயல்களைச் செய்யாதே என்று வலியுறுத்துகின்றது' எனும் புரிதலையும் சேர்த்தே வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லையெனில் புரிந்த தவறுகளையேப் புரிந்து வினைச் சூழலில் உழன்று கொண்டிருக்கும் நிலை உருவாகும்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசித்தல் மற்றும் திருத்தொண்டு புரிதல், புண்ணிய நதிகளில் நீராடுதல், திருக்கோயில்களில் (இறைவனின் பொருட்டு) தீபமேற்றி வழிபடுதல், அருளாளர்களின் திருப்பதிகங்களை உள்ளன்புடன் ஓதி வருதல், பிற உயிரினங்களின் கதறல்களிலிருந்துத் தோன்றும் மாமிசம் உட்கொள்வதை அறவே தவிர்த்தல், எளியவர்களுக்கு இயன்ற பொழுதெல்லாம் உதவி வருதல், உயிர்களின் இடர்களை நீக்குதல் ஆகியவை மட்டுமே பாதகமான கிரகச் சூழலிலிருந்து நம்மை காத்துதவும் அரண்களாக அமையும் (சிவ சிவ).
நமது பிராரப்த வினைகளாலேயே நன்மை - தீமைகள் விளைகின்றனவேயன்றி கிரகங்களால் ஒருபொழுதும் அல்ல; அல்ல;அல்ல எனும் தெளிவான புரிதல் முதலில் அவசியமாகின்றது. 'அவ்வினைக்கு இவ்வினை' என்பார் திருஞானசம்பந்த மூர்த்தி. ஆன்மாக்களின் பிராரப்த வினைகளை உரிய காலத்தில், உரிய விதத்தில் சேர்ப்பிக்கும் நவ கோள்களும் 'அஞ்சலைத் தக்கோரிடத்துச் சேர்ப்பிக்கும்' தபால்காரரைப் போன்றவைகளே. வழிபாடுகளை ஏற்று, தீய பலன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவனால் இக்கோள்களின் அதிதேவதைகளுக்கு வழங்கப் படவில்லை.
குறிப்பிட்ட ஒரு கிரகம் நம்முடைய ராசிக்குச் சாதகமல்லாத கட்டமொன்றிற்கு வருமாயின் நமது பிராரப்த வினைகளிலிருந்துத் தீவினைப் பயன்களை மிகுதியாகவும், சாதகமான கிரகச் சூழலில் நல்வினைப் பயன்களை மிகுதியாகவும் நம்மை நுகருமாறுச் செய்வதே கோள்களின் பணியாகும். அது விடுத்து, நம் பிராரப்த வினைகளுக்குத் தொடர்பில்லாத புதியதொரு நல்வினை; தீவினையை கிரகங்களால் என்றுமே நூதனமாக உருவாக்கித் தந்துவிட இயலாது.
சனி கெடுப்பார்; குரு கெடுப்பார் என்று கூறி வருவதே பிழையான பிரயோகம், நாம் புரிந்து வந்துள்ள எண்ணிறந்த தீவினைகளே நம்மைத் தொடர்ந்து வந்து கெடுக்கின்றன என்று அவ்வப்பொழுது நினைவு கூர்தல் அவசியம்.
ஒன்பது நவகிரகத் திருத்தலங்களும் அடிப்படையில் சிவ ஷேத்திரங்களே, இத்தலங்களில் சிவபரம்பொருளை வழிபடுவதால் தோஷ நிவாரணம் கிட்டுமேயன்றிக் கிரக வழிபாட்டினால் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை. நம்மைப் போன்றே கிரங்கங்களின் அதிதேவதைகளுக்கும் ஆயுட்கால வரையரை உண்டு, அதன் பின்னர் புதியதொரு அதிகாரி அந்தந்த கிரங்கங்களுக்கு இறைவனால் நியமிக்கப் பெறுவார்.
*
பெயர்ச்சியன்று மட்டும் ஆலய வழிபாடு புரிந்து விட்டு பிற நாட்களில் நம் வாழ்வியல் முறைகளில் வேறெந்த விதமான மாறுதல்களையும் கொண்டு வரவில்லையெனில் எவ்வித அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
சாதகமல்லாத பெயர்ச்சிக் காலத்தில் நாம் பதறுவது ஒரு புறமிருக்கட்டும், 'எதனால் நமக்குத் தீவினைகள் வருகின்றன? சாத்திரங்கள் எந்தெந்த செயல்களைச் செய்யாதே என்று வலியுறுத்துகின்றது' எனும் புரிதலையும் சேர்த்தே வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லையெனில் புரிந்த தவறுகளையேப் புரிந்து வினைச் சூழலில் உழன்று கொண்டிருக்கும் நிலை உருவாகும்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசித்தல் மற்றும் திருத்தொண்டு புரிதல், புண்ணிய நதிகளில் நீராடுதல், திருக்கோயில்களில் (இறைவனின் பொருட்டு) தீபமேற்றி வழிபடுதல், அருளாளர்களின் திருப்பதிகங்களை உள்ளன்புடன் ஓதி வருதல், பிற உயிரினங்களின் கதறல்களிலிருந்துத் தோன்றும் மாமிசம் உட்கொள்வதை அறவே தவிர்த்தல், எளியவர்களுக்கு இயன்ற பொழுதெல்லாம் உதவி வருதல், உயிர்களின் இடர்களை நீக்குதல் ஆகியவை மட்டுமே பாதகமான கிரகச் சூழலிலிருந்து நம்மை காத்துதவும் அரண்களாக அமையும் (சிவ சிவ).
தசாவதாரங்களின் வரிசையில் புத்தரும் ஒருவரா? முறையான விளக்கங்கள்:
பாற்கடல் வாசனான ஸ்ரீமகாவிஷ்ணு இது வரையிலும் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது, இனி கலியுக இறுதியில் எடுக்கவிருக்கும் அவதாரம் ஒன்று, இனி இப்பத்து அவதாரங்களின் முறையான வரிசையினைத் தக்க சான்றுகளுடன் உணர்ந்துத் தெளிவோம்,
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரின் ஸ்ரீரங்கப் பாசுரத்திலிருந்து முதலில் துவங்குவோம்,
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் -குறளாய்
மூவுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் -முடிப்பான் கோயில்
-
பெரியாழ்வார் குறித்துள்ள தசாவதாரங்களின் வரிசை பின்வருமாறு, மீன் (மச்ச அவதாரம்), ஆமை (கூர்ம அவதாரம்), ஏனம் (வராக அவதாரம்), குறள் (இரண்டு அடிகளால் உலகங்கள் யாவையையும் அளந்த காரணத்தால் வாமன அவதாரத்தைக் குறள் என்று போற்றுகின்றார்), மூவுருவில் இராமனாய் (பரசுராமர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் மூத்த சகோதரரான பலராமர்), ஸ்ரீகிருஷ்ண அவதாரம் மற்றும் கல்கி அவதாரம்.
அடுத்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தில் குறிக்கப் பெற்றுள்ள வரிசையையும் காண்போம்,
மீனோடு ஆமை கேழலாய் அரி குறளாய் முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய் கல்கியும் ஆனான்
-
மேற்குறித்துள்ள திருப்பாடல் வரிகளிலும் அதே வரிசை குறிக்கப் பெற்றுள்ளது, மீன் (மச்ச மூர்த்தி), ஆமை (கூர்ம மூர்த்தி), கேழல் (வராக மூர்த்தி), குறள் (வாமன மூர்த்தி), முன்னும் ராமனாய் (பரசுராமர்), தானே (ஸ்ரீராமர்), பின்னும் ராமனாய் (பலராமர்), தாமோதரனாய் (ஸ்ரீகிருஷ்ணர்), கல்கி.
உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ இணைய தளங்கள் பலவற்றிலுள்ள தசாவதாரப் படங்களில், 'பலராமருக்கு மாற்றாக புத்தரின் படம்' காணப் பெறுகின்றது. இது முற்றிலும் பிழையானது, எவ்வித ஆதாரமுமில்லாத பிற்காலத் திணிப்பு. புராணங்களும், அருளாளர்களின் திருப்பாடல்களும் 'கலப்பையோடு காட்சி அளிக்கும் பலராமரையே' தச அவதாரங்களில் ஒருவராக முன்னிறுத்துகின்றன (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!!!
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரின் ஸ்ரீரங்கப் பாசுரத்திலிருந்து முதலில் துவங்குவோம்,
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் -குறளாய்
மூவுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் -முடிப்பான் கோயில்
-
பெரியாழ்வார் குறித்துள்ள தசாவதாரங்களின் வரிசை பின்வருமாறு, மீன் (மச்ச அவதாரம்), ஆமை (கூர்ம அவதாரம்), ஏனம் (வராக அவதாரம்), குறள் (இரண்டு அடிகளால் உலகங்கள் யாவையையும் அளந்த காரணத்தால் வாமன அவதாரத்தைக் குறள் என்று போற்றுகின்றார்), மூவுருவில் இராமனாய் (பரசுராமர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் மூத்த சகோதரரான பலராமர்), ஸ்ரீகிருஷ்ண அவதாரம் மற்றும் கல்கி அவதாரம்.
அடுத்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தில் குறிக்கப் பெற்றுள்ள வரிசையையும் காண்போம்,
மீனோடு ஆமை கேழலாய் அரி குறளாய் முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய் கல்கியும் ஆனான்
-
மேற்குறித்துள்ள திருப்பாடல் வரிகளிலும் அதே வரிசை குறிக்கப் பெற்றுள்ளது, மீன் (மச்ச மூர்த்தி), ஆமை (கூர்ம மூர்த்தி), கேழல் (வராக மூர்த்தி), குறள் (வாமன மூர்த்தி), முன்னும் ராமனாய் (பரசுராமர்), தானே (ஸ்ரீராமர்), பின்னும் ராமனாய் (பலராமர்), தாமோதரனாய் (ஸ்ரீகிருஷ்ணர்), கல்கி.
உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ இணைய தளங்கள் பலவற்றிலுள்ள தசாவதாரப் படங்களில், 'பலராமருக்கு மாற்றாக புத்தரின் படம்' காணப் பெறுகின்றது. இது முற்றிலும் பிழையானது, எவ்வித ஆதாரமுமில்லாத பிற்காலத் திணிப்பு. புராணங்களும், அருளாளர்களின் திருப்பாடல்களும் 'கலப்பையோடு காட்சி அளிக்கும் பலராமரையே' தச அவதாரங்களில் ஒருவராக முன்னிறுத்துகின்றன (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!!!
துறவுக் கோலத்தில் போதை வழக்கம் கைக்கொள்வோர் ஞானிகளா?
வாரணாசி; ஹரித்வார்; திரிவேணி சங்கமம் ஆகிய தலங்களில் துறவிகள் போன்ற தோற்றத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, போதை வஸ்துக்களைப் புகைத்த வண்ணமிருப்போரை நம்மால் காண இயலும். இது குறித்த சில நுட்பங்களை இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.
நமது இந்து தர்மம் கள்ளினை உட்கொள்வது பஞ்ச மகா பாதகங்களில் ஒன்றெனச் சுட்டுகின்றது, 'கள்' என்பது மது பானத்தினை மட்டும் குறிக்க வந்ததல்ல, மனத்தையும், அறிவையும் தன்னிலை இழக்கச் செய்யும் அனைத்து வித போதை வஸ்துக்களும் அதனுள் அடங்கும். திருமூலர் 'கள்ளுண்ணாமை' எனும் அதிகாரத்தில் போதை வழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார்.
'காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்' என்று 'முறையற்ற காமமும், போதை வழக்கமும் கீழ் மக்களுக்கே உரியது' என்று சாடுகின்றார் திருமூலர். உலக மாயையாகிய மயக்கத்திலிருந்து விடுபட்டு உய்வு பெற மற்றொரு மயக்கத்தை நாடுவோர் மூடர்களே என்கின்றார்,
-
மயக்கும் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
'வாமாச்சார வழியில் சக்தி வழிபாடு புரிகிறேன் பேர்வழி' என்று பிதற்றிக் கொண்டு போதை வழக்கத்தைக் கைக்கொள்பவர் தம்மிடம் எஞ்சியுள்ள சக்தியையும் இழந்து அழிவர், அம்பிகையின் திருவருள் எக்காலத்திலும் இம்மூடர்களுக்குக் கிட்டாது, சக்தியைச் சிவானந்தம் எய்தும் முயற்சியில் செலவிட வேண்டுமேயன்றி போதை வழக்கத்திலல்ல என்று தெளிவுறுத்துகின்றார்.
-
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே.
மெய்ஞான யோகிகள் யோகக் கனலை மேலெழுப்பிச் சகஸ்ராரத்தில் சிவதரிசனம் கண்டுச் சிவானந்தத் தேன் எனும் மதுவுண்டு வாழ்ந்திருப்பர். மற்றொருபுறம் போலி யோகிகளாகிய மூடர்கள் கள் முதலிய போதை வஸ்துக்களைக் கைக்கொண்டு அறிவிழந்து அழிந்து போவார், இவர்கள் ஒருக்காலமும் ஞானம் அடையார் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் திருமூலர்,
இப்பதிவின் நோக்கம் இத்தகையோரின் பக்தியைச் சாடுவது அல்ல, பக்தி என்பது ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தனிப்பட்ட தொடர்பு, அதனை விமரிசிக்க எவருக்கும் உரிமையில்லை. எனினும் இந்து தர்ம ஞானிகள் மற்றும் ஆச்சாரியர்கள், நால்வர் பெருமக்கள்; அருணகிரிநாதர் மற்றும் சைவ சமய அருளாளர்கள் ஆகியோர் வழிவழியாய் முன்னிறுத்திய, வழிமொழிந்துள்ள தர்மங்களில் அபிமானம் உள்ள எவருக்கும் அறமற்ற போதை பழக்கத்தினைச் சாடும் கடமையும், உரிமையும் உண்டு.
பொய்த்துறவு பூண்டு இத்தகைய வழக்கத்தில் ஈடுபடுவோர் வாழ்வினைச் சந்திக்க அச்சம் கொண்டவர்கள்; அதனால் போதை வழக்கத்தினைக் கைக்கொள்ளத் துவங்கிப் பின் அதற்கு அடிமையாகி உழலும் சாமான்ய மனிதர்களே. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவிடலாம், உதவலாம் எனினும் இவர்கள் ஒருக்காலும் வணங்கத் தக்கவரல்ல; மிகத் தவறான வழிகாட்டிகள்.
உடனே அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள, நாம் ஞானிகள் என்று நம்பும், புகைப்பழக்கம் உள்ளோர் சிலரை முன்னிறுத்தி விவாதித்து நேரத்தை விரயமாக்குவதை விடுப்போம், 'போதை வழக்கத்தினைக் கைக்கொண்டும் ஆன்ம இலாபம் பெற இயலும்' எனும் அறம் சிறிதுமற்ற சிந்தனையை அகற்றுவோம், வழிவழி வந்துள்ள நமது சமய குருநாதர்களின் வழியில் பயணித்துத் தெளிவுறுவோம் (சிவ சிவ).
நமது இந்து தர்மம் கள்ளினை உட்கொள்வது பஞ்ச மகா பாதகங்களில் ஒன்றெனச் சுட்டுகின்றது, 'கள்' என்பது மது பானத்தினை மட்டும் குறிக்க வந்ததல்ல, மனத்தையும், அறிவையும் தன்னிலை இழக்கச் செய்யும் அனைத்து வித போதை வஸ்துக்களும் அதனுள் அடங்கும். திருமூலர் 'கள்ளுண்ணாமை' எனும் அதிகாரத்தில் போதை வழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கின்றார்.
'காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்' என்று 'முறையற்ற காமமும், போதை வழக்கமும் கீழ் மக்களுக்கே உரியது' என்று சாடுகின்றார் திருமூலர். உலக மாயையாகிய மயக்கத்திலிருந்து விடுபட்டு உய்வு பெற மற்றொரு மயக்கத்தை நாடுவோர் மூடர்களே என்கின்றார்,
-
மயக்கும் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
'வாமாச்சார வழியில் சக்தி வழிபாடு புரிகிறேன் பேர்வழி' என்று பிதற்றிக் கொண்டு போதை வழக்கத்தைக் கைக்கொள்பவர் தம்மிடம் எஞ்சியுள்ள சக்தியையும் இழந்து அழிவர், அம்பிகையின் திருவருள் எக்காலத்திலும் இம்மூடர்களுக்குக் கிட்டாது, சக்தியைச் சிவானந்தம் எய்தும் முயற்சியில் செலவிட வேண்டுமேயன்றி போதை வழக்கத்திலல்ல என்று தெளிவுறுத்துகின்றார்.
-
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே.
மெய்ஞான யோகிகள் யோகக் கனலை மேலெழுப்பிச் சகஸ்ராரத்தில் சிவதரிசனம் கண்டுச் சிவானந்தத் தேன் எனும் மதுவுண்டு வாழ்ந்திருப்பர். மற்றொருபுறம் போலி யோகிகளாகிய மூடர்கள் கள் முதலிய போதை வஸ்துக்களைக் கைக்கொண்டு அறிவிழந்து அழிந்து போவார், இவர்கள் ஒருக்காலமும் ஞானம் அடையார் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார் திருமூலர்,
இப்பதிவின் நோக்கம் இத்தகையோரின் பக்தியைச் சாடுவது அல்ல, பக்தி என்பது ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தனிப்பட்ட தொடர்பு, அதனை விமரிசிக்க எவருக்கும் உரிமையில்லை. எனினும் இந்து தர்ம ஞானிகள் மற்றும் ஆச்சாரியர்கள், நால்வர் பெருமக்கள்; அருணகிரிநாதர் மற்றும் சைவ சமய அருளாளர்கள் ஆகியோர் வழிவழியாய் முன்னிறுத்திய, வழிமொழிந்துள்ள தர்மங்களில் அபிமானம் உள்ள எவருக்கும் அறமற்ற போதை பழக்கத்தினைச் சாடும் கடமையும், உரிமையும் உண்டு.
பொய்த்துறவு பூண்டு இத்தகைய வழக்கத்தில் ஈடுபடுவோர் வாழ்வினைச் சந்திக்க அச்சம் கொண்டவர்கள்; அதனால் போதை வழக்கத்தினைக் கைக்கொள்ளத் துவங்கிப் பின் அதற்கு அடிமையாகி உழலும் சாமான்ய மனிதர்களே. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவிடலாம், உதவலாம் எனினும் இவர்கள் ஒருக்காலும் வணங்கத் தக்கவரல்ல; மிகத் தவறான வழிகாட்டிகள்.
உடனே அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள, நாம் ஞானிகள் என்று நம்பும், புகைப்பழக்கம் உள்ளோர் சிலரை முன்னிறுத்தி விவாதித்து நேரத்தை விரயமாக்குவதை விடுப்போம், 'போதை வழக்கத்தினைக் கைக்கொண்டும் ஆன்ம இலாபம் பெற இயலும்' எனும் அறம் சிறிதுமற்ற சிந்தனையை அகற்றுவோம், வழிவழி வந்துள்ள நமது சமய குருநாதர்களின் வழியில் பயணித்துத் தெளிவுறுவோம் (சிவ சிவ).
திருக்கோயிலிலுள்ள மூலவர் படங்களை முகநூலில் பகிரலாமா? (சில சிந்தனைகள்):
நம் இந்து தர்ம ஆலயக் கருவறையிலுள்ள மூல மூர்த்தியின் தரிசனம் என்பது தனித்துவமான அனுபவத்தைத் தரவல்லது, ஏராளமானோர் திருச்சன்னிதி முன்பு கூடியிருந்தாலும் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் இறைவனுக்கும் இடையே தனிப்பட்ட உரையாடலொன்று நடந்தேறிய வண்ணமிருக்கும். எண்ணிறந்த பக்தர்கள் விரதமிருந்துப் பலநாட்கள் பாத யாத்திரையாக நடந்து திருக்கோயில்களுக்குச் செல்வது அற்புதமான அந்த சில நிமிட நேர இறை தரிசனத்திற்காகவே, திருப்பதி பெருமாளைத் தரிசிக்கப் பலமணி நேரம் ஆர்வத்துடன் மெய் வருந்தக் காத்திருந்து, வரிசையில் மெதுமெதுவே முன்னேறி இறுதியாய் வேங்கடவனின் ஆச்சரியமான திருக்கோல தரிசனத்தைக் கண்ணாற சில கணங்களே தரிசித்துப் பேரானந்தம் அடைந்துப் பின் சிறிது ஏக்கத்துடனே வெளிவரும் அனுபவம் நம் தர்மத்திற்கே உரித்தானது.
நாயன்மார்கள்; ஆழ்வார்கள்; அருணகிரிநாதர் மற்றும் எண்ணிறந்த முனிவர்கள்; ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சார்யர்கள் ஆகியோர் தரிசித்தும் போற்றியும் பரவியுள்ள மூல மூர்த்தியைப் படமெடுப்பதும், அதனைப் பகிர்வதும் ஆகம விரோத செயலாகும், இறை பக்தியை வளர்க்கும் கருத்திலேயே நம் இந்து தர்ம சகோதரர்களும் சகோதரிகளும் இத்தகு படங்களை முகநூலில் பகிர்கின்றனர் எனினும் இவ்வழிமுறை எவ்விதக் கோணத்திலும் ஏற்புடையதல்ல, நம் சமய முன்னோர்கள் இதனை ஒரு பொழுதும் அங்கீகரித்ததுமில்லை.
உற்சவங்கள் நடைபெறும் பொழுது, உற்சவத் திருமேனிகளைப் படமெடுப்பதும் பகிர்வதும் தற்காலச் சூழலில் தவிர்க்கவே இயலாதவொன்றாகி விட்ட காரணத்தால் அதனால் பாதகமொன்றும் இல்லை, மூல மூர்த்தியின் ஓவியத்தைக் கூட பகிரலாம் எனினும் மூல மூர்த்தியின் நேரடிப் புகைப்படத்தைப் பகிர்வதை இக்கண முதலே நிறுத்துவோம், 'நானொன்றும் புகைப்படம் எடுக்கவில்லையே, தினமலர் வலைத்தளத்திலுள்ள படங்களைத் தானே பகிர்கின்றேன்' என்போருக்கும் இது பொருந்தும், திருக்கோயில் யாத்திரையையும், இறை தரிசன இன்பத்தையுமே ஆன்ம இலட்சியமாகக் கொண்டுள்ள எண்ணிறந்த அடியவர்களுக்கு இவ்விதமாய் முகநூலில் உலவி வரும் மூலவர் புகைப்படங்களைக் காண்கையில் உள்ளம் துடித்துப் பதறும் என்பது கண்கூடு.
நாயன்மார்கள்; ஆழ்வார்கள்; அருணகிரிநாதர் மற்றும் எண்ணிறந்த முனிவர்கள்; ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சார்யர்கள் ஆகியோர் தரிசித்தும் போற்றியும் பரவியுள்ள மூல மூர்த்தியைப் படமெடுப்பதும், அதனைப் பகிர்வதும் ஆகம விரோத செயலாகும், இறை பக்தியை வளர்க்கும் கருத்திலேயே நம் இந்து தர்ம சகோதரர்களும் சகோதரிகளும் இத்தகு படங்களை முகநூலில் பகிர்கின்றனர் எனினும் இவ்வழிமுறை எவ்விதக் கோணத்திலும் ஏற்புடையதல்ல, நம் சமய முன்னோர்கள் இதனை ஒரு பொழுதும் அங்கீகரித்ததுமில்லை.
உற்சவங்கள் நடைபெறும் பொழுது, உற்சவத் திருமேனிகளைப் படமெடுப்பதும் பகிர்வதும் தற்காலச் சூழலில் தவிர்க்கவே இயலாதவொன்றாகி விட்ட காரணத்தால் அதனால் பாதகமொன்றும் இல்லை, மூல மூர்த்தியின் ஓவியத்தைக் கூட பகிரலாம் எனினும் மூல மூர்த்தியின் நேரடிப் புகைப்படத்தைப் பகிர்வதை இக்கண முதலே நிறுத்துவோம், 'நானொன்றும் புகைப்படம் எடுக்கவில்லையே, தினமலர் வலைத்தளத்திலுள்ள படங்களைத் தானே பகிர்கின்றேன்' என்போருக்கும் இது பொருந்தும், திருக்கோயில் யாத்திரையையும், இறை தரிசன இன்பத்தையுமே ஆன்ம இலட்சியமாகக் கொண்டுள்ள எண்ணிறந்த அடியவர்களுக்கு இவ்விதமாய் முகநூலில் உலவி வரும் மூலவர் புகைப்படங்களைக் காண்கையில் உள்ளம் துடித்துப் பதறும் என்பது கண்கூடு.
இந்து தர்மத்தின் ஏழு மோட்ச நகரங்கள்:
ஒப்புவமையற்ற நமது இந்து தர்ம சாத்திரங்கள் சப்தபுரி எனும் ஏழு புராதனமான ஷேத்திரங்களை முத்தித் தலங்கள் என்று போற்றுகின்றது, அவை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்த அயோத்தி, ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த மதுரா, மாயாபுரி எனும் ஹரித்வார், காசி எனும் வாரணாசி, தமிழகப் பகுதியிலுள்ள காஞ்சீபுரம், அவந்திபுரம் எனும் உஜ்ஜையினி, ஸ்ரீகிருஷ்ணன் அரசாட்சி புரிந்து வந்த துவாரகை. இந்து தர்மத்தினை இன்னுயிரெனப் பின்பற்றுவோர் இவ்வேழு தலங்களுக்கும் யாத்திரை மேற்கொள்வதைத் தம்முடைய வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருப்பர் (சிவ சிவ)!!!
சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (மதங்கள் பொய்யா ? சில நுட்பமான விளக்கங்கள்):
வள்ளலார் திருவருட்பாவில் 'மதமும் சமயமும் பொய்' என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரான சிவபெருமான் தனக்கு உணர்த்தியதாகப் பதிவு செய்கின்றார், 'தெய்வ மணி மாலை' எனும் பாடல் தொகுப்பிலும் 'மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்' என்று கந்தக் கோட்ட முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார். மிகவும் நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டிய வாக்கியமிது. 'மதம்' எனும் பதத்திற்கு என்ன பொருள் கொள்வது? மனிதனை உயர் நிலை ஞானத்துக்கு இட்டுச் செல்லவும், இறைவனை அடைவிக்கவுமாய் வழிவழியாய் நம் சமயச் சான்றோர் பின்பற்றியும் வழிமொழிந்தும் வந்துள்ள கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளையே மதம் என்று பொதுவில் குறிக்கின்றோம்.
வள்ளலாரின் கோட்பாடுகளும் இதே நோக்கங்களையே முன்வைக்கின்றது அவ்விதமிருக்க 'மதம் பொய்' என்று வள்ளலார் குறிப்பதன் உட்கருத்து தான் என்ன? மதம் என்ற பதத்துக்குச் 'செருக்கு' என்றொரு பொருளுமுண்டு, அதீதமான; மித மிஞ்சிய நிலையையும் அது சுட்டுகின்றது, இனி மதங்களின் பெயரால் நடந்தேறும் முறைகேடுகளைக் காண்போம்.
பல தெய்வ வடிவங்களின் வழிபாடு நிலவி வரும் ஒரு மதத்தில், ஒவ்வொரு வடிவத்தின் உபாசகரும் பிற தெய்வ வடிவங்களைக் கடுமையாக நிந்திப்பது; மதம் அறிவுறுத்தும் தர்மங்களைப் பின்பற்றுவதை விடுத்து எந்நேரமும் சமய வாதங்களைப் புரிந்து கொண்டிருப்பது; அம்மதத்தின் மற்ற பிரிவினரைக் கடுமையாக விமரிசிப்பது அல்லது இகழ்வது;
மற்றொரு புறம் பிற மதங்களின் தெய்வங்களை மிகவும் தரக் குறைவாகப் பேசியும், கோடிக்கணக்கில் பணத்தை வாரியிரைத்தும் மதமாற்றத்தில் ஈடுபடுவது; பிற மதங்களின் தத்துவங்களைத் தாங்களே உருவாக்கியது போல் போலியாகச் சித்தரித்துப் பிரச்சாரம் செய்வது; சேவை நிறுவனங்கள் எனும் போர்வையில் பற்பல மருத்துவ மனைகளை உருவாக்கி முழுநேர மதமாற்றத்தில் ஈடுபடுவது; வீடு வீடாகச் சென்று பிற மதத் தெய்வங்கள் சாத்தான்கள் என்று பிதற்றித் திரிவது; தங்கள் கடவுள் மட்டுமே சுவர்க்கம் அளிப்பவர்; மற்ற மதத்தினர் நரகம் செல்வர் என்று மனநோய் கொண்டு பேசித் திரிவது; பிற மத தெய்வங்களைப் போலவே தங்கள் தெய்வத்தையும் வடிவமைத்துக் குழப்பிப் பின் மதமாற்றுவது; அரசியல் பலம் மூலம் வற்புறுத்தி மதமாற்றுவது;
பிற மதத்து ஆண் மற்றும் பெண்களைக் காதல் எனும் வலையில் சிக்க வைத்துப் பின் மதமாற்றுவது; மற்ற மதத்தினரைக் கொல்வதே இறைவனுக்குப் புரியும் பெரும் தொண்டு என்று வரைமுறையற்ற வன்முறையில் ஈடுபடுவது; பிற மதச் சின்னங்களை அடியோடு அழிப்பது; பிற மத வழிபாட்டுத் தளங்களைத் தகர்ப்பது; பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலை மிரட்டல் மூலம் மதமாற்றம் புரிவது;
மேற்கூறப்பட்ட செயல்களனைத்தும், மதம் என்ற எல்லையைத் தாண்டி மித மிஞ்சிய நிலையில் புரியப்படும் சகிக்க முடியாத முறைகேடுகள் ஆகும். பிற உயிர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்காமல் ஞானப் பாதையில் பயணிப்பதே மதத்தைப் பின்பற்றுபவரின் மேலான நோக்கமாக இருத்தல் வேண்டும்.
அகிம்சையை முன்னிருத்தும், சரியான கோட்பாடுகளோடு கூடிய ஒரு மதம் சர்வ நிச்சயமாய் மனித இனத்தை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். பரம புண்ணியமான நம் பாரத தேசத்தில் எண்ணிறந்த அருளாளர்களும்; ஞானிகளும்; ஆச்சாரியர்களும் உத்தமமான நமது இந்து தர்மத்தினைப் பின்பற்றியே பிறவாப் பெருநிலையினை எய்தியுள்ளனர். வள்ளலார் மதங்களைக் கண்டிக்கவில்லை, மதங்களின் பெயரால் நடந்தேறும் இத்தகு முறைகேடுகளையே 'பொய்' என்று நிந்திக்கின்றார் (சிவ சிவ)!!!
Subscribe to:
Comments (Atom)











