கண்ணதாசன் இளம் பிராயத்தில் ஈ.வே.ரா வின் கோட்பாடுகளால் (???) பெரிதும் ஈர்க்கப்பட்டு அவருடைய இறை மறுப்புக் கழகத்தில் இணைகின்றார். ஈ.வே.ரா வின் இயக்கம் அச்சமயத்தில் 'இந்து மதத்தினை எதிர்க்கும்' பிரதான நோக்குடன் 'கம்ப இராமாயணம் தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது' எனும் போலிப் பிரச்சாரத்தினைக் கையிலெடுக்கின்றது. அக்காவியத்தில் கையாளப்படும் 'அசுரர்கள்' எனும் பதம் 'தமிழர்களையே குறிக்கின்றது' என்றும், 'தமிழினத்தைக் கம்ப காவியம் குரங்குகளாகச் சித்தரிக்கின்றது' என்றும் வரைமுறையற்ற புதுப்புதுக் கதைகளைப் புனைந்துப் பிதற்றித் திரிந்து வருகின்றனர்.
கம்ப இராமாயண நூல்களையும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவுருவப் படங்களையும் எரிக்கும் போராட்டங்களைப் பல்வேறு இடங்களில் துவங்குகின்றனர். அறிஞர்(???) அண்ணாவும் 'கம்ப ராமாயணம் ஒரு காம நூல்' எனும் நூலொன்றினை எழுதித் தன் பங்குக்குப் பகுத்தறிவுத் திருப்பணி (???) புரிகின்றார். இக்கட்டான இக்கால கட்டத்தில் கம்ப இராமாயணத்தைத் தானும் விமர்சித்து எழுத வேண்டும் எனும் நோக்கோடு அதனைப் படிக்கத் துவங்குகின்றார் முத்தையா (கண்ணதாசன்).
தொடர்ந்து பல மாதங்கள் கவிச்சக்கரவர்த்தியின் இலக்கியப் புனலில் மூழ்கியெழுகின்றார். அத்திருப்பாடல்களின் மேன்மையினை உணர்ந்து வியக்கின்றார். 'இரக்கம் என்றவொன்று இல்லாதிருப்பவரே அரக்கர்' என்று கம்பர் குறித்துள்ளமையைக் கற்றுத் தெளிகின்றார். உன்னதமான வாழ்வியல் கோட்பாடுகளும், மனித வாழ்வை மேம்படுத்தும் ஒப்புவமையற்ற தர்மங்களும் கம்ப இராமாயணம் முழுவதும் பரவியிருத்தலைக் காண்கின்றார்.
இதன் பின்னர், கொள்கைகள் ஏதுமற்று, புரிதலற்ற வெறுப்பு; பகைமை; காழ்ப்புணர்ச்சி இவைகளை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் ஈ.வே.ரா வின் நாத்தீகக் கழகத்திலிருந்து முழுவதும் விலகி வந்து, இந்து சமயத்தைப் பின்பற்றத் துவங்குகின்றார் நம் கவியரசர். ஆர்வம் மீதுறப் பற்பல இந்து தர்ம சாத்திரங்கள்; உபநிடதங்கள்; கீதை; சைவ; வைணவ அருளாளர்களின் திருப்பாடல்கள் இவைகளை எண்ணிறந்த ஆண்டுகள் பெரிதும் முனைந்துக் கசடறக் கற்றறிகின்றார்.
இந்து தர்மம் முன்னிறுத்தும் வழிபாட்டு முறைகள்; சடங்குகள்; மரபுகள் இவை ஒவ்வொன்றையும் பல்வேறு கோணங்களில் ஆய்ந்தறிந்து 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் அற்புத நூலை இயற்றுகின்றார். 10 பகுதிகளைக் கொண்ட இந்நூல் பதிப்பித்து வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பெருமையினைக் கொண்டது. திருவருளால் திரு.கண்ணதாசன் அவர்களுக்கு கைகூடிய கிடைத்தற்கரிய அனுபவ ஞானத்தினை இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர இயலும்.
முட்டாள் இராவணன் (பழனித் திருப்புகழில் இராவணனை கடுமையாய் நிந்திக்கும் அருணகிரிநாதர்):
முருகப் பெருமானை பலமுறை நேரிலேயே தரிசித்துப் போற்றியுள்ள அருணகிரிநாதர் 'இத்தாரணிக்குள்' என்று துவங்கும் திருப்புகழின் இறுதி வரிகளில் இராவணனை மிகக் கடுமையாய்ச் சாடிப் பின் திருமாலின் அவதாரமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுகின்றார்,
-
மத்தா மதக்களிறு பின்தானுதித்த குகன்
ஏதத்திலங்கையினில் ஆதிக்கம்உண்டதொரு
முட்டாள்அரக்கர்தலை இற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுருவாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமலம் உற்றா சனத்திருவை
மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய ...... மருமகனாகி
-
(சுருக்கமான பொருள்):
யானையின் திருமுகம் கொண்ட ஸ்ரீவிநாயக மூர்த்தியின் பின்னர் தோன்றிய ஆறுமுகக் கடவுளே, குற்றம் நிறைந்த இலங்கையை ஆண்டு வந்த, அறிவு ஒருசிறிதுமில்லாத முட்டாள் அரக்கனான இராவணனின் தலைகள் பத்தும் நிலத்தில் இற்று விழுமாறு கணைகளை ஏவிய, மேகத்தின் நிறம் கொண்டவரும், சனகன் மகளாகிய அன்னை சீதையை மணம் புரிந்தவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அன்புக்கு உரிய மருமகனே!!!
-
மத்தா மதக்களிறு பின்தானுதித்த குகன்
ஏதத்திலங்கையினில் ஆதிக்கம்உண்டதொரு
முட்டாள்அரக்கர்தலை இற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுருவாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமலம் உற்றா சனத்திருவை
மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய ...... மருமகனாகி
-
(சுருக்கமான பொருள்):
யானையின் திருமுகம் கொண்ட ஸ்ரீவிநாயக மூர்த்தியின் பின்னர் தோன்றிய ஆறுமுகக் கடவுளே, குற்றம் நிறைந்த இலங்கையை ஆண்டு வந்த, அறிவு ஒருசிறிதுமில்லாத முட்டாள் அரக்கனான இராவணனின் தலைகள் பத்தும் நிலத்தில் இற்று விழுமாறு கணைகளை ஏவிய, மேகத்தின் நிறம் கொண்டவரும், சனகன் மகளாகிய அன்னை சீதையை மணம் புரிந்தவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அன்புக்கு உரிய மருமகனே!!!
பெரும்பாட்டன் லாஜிக்கில் மாற்றம் செய்வோம் (அலைகடலென அணி திரண்டு வாரீர் 😏🔥):
முறையற்ற காமத்தினால் பிறர் மனைவியைக் கடத்திச் சென்ற கொடியவனான இராவணனைப் பெரும்பாட்டன் என்று கூறுவதற்கு பதிலாக அச்செயல் தவறென்று பல்வேறு வகைகளில் அறிவுறுத்த முயன்று இராவணனால் அவமானப் படுத்தப்பட்ட அவனுடைய சகோதரன் விபீஷணனையோ அல்லது அண்ணனுக்கு 'அன்னை சீதையைக் கவர்ந்தது முறையற்றது, பேசுவது மானம் இடைபேணுவது காமம்' என்று அறிவுறுத்திய மற்றொரு சகோதரனான கும்பகர்ணனையோ பெரும் பாட்டனாக ஏற்கலாமே! பிறர் மனைவியைக் கவர்ந்தவனை ரோல் மாடலாகக் கொள்வதை விட இது கௌரவமான செயலல்லவா ? எப்படி பார்த்தாலும் இம்மூவரும் ஒரே குடும்பம் தானே? தமிழன்டா!!!!
ஸ்ரீராமர் ஏன் இலங்கைக்குப் பறந்து செல்லவில்லை? (காஞ்சி மகாப் பெரியவரின் அற்புத விளக்கங்கள்):
ஸ்ரீராமர் ஏன் இலங்கைக்குப் பறந்து செல்லவில்லை? இராவணன் கடத்திச் செல்லும் பொழுது சீதையின் கூக்குரல் ஏன் இராமனுக்கு கேட்கவில்லை, எனில் அவர் எப்படி கடவுளாக இருந்திருக்க முடியும்? (காஞ்சி மகாப் பெரியவரின் அற்புத விளக்கங்கள்):
"இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம், அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?" என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள், ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்த போது மனுஷ்ய வேடத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்துப் பேசுகிறார்கள்.
ஒரு நாடகம் நடக்கிறது, இராமாயண நாடகம் தான். அதில் லவ; குசர்களை வால்மீகி இராமனிடம் அழைத்து வருகிறார், ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்கார் இராமனாக வேடம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்த பிள்ளைகளே நாடகத்தில் லவ; குசர்களாக நடிக்கிறார்கள். நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து 'இந்த குழந்தைகள் யார்' என்று கேட்கிறார். ராமசுவாமி அய்யங்காருக்குத் தன்னுடைய சொந்த பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி 'இவர்கள் ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமசுவாமி அய்யங்கார்! என்று பதில் சொன்னால் எத்தனை ரசாபாசமாக இருக்கும்? வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத் தான் நடிக்க வேண்டும்.
ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேடம் போட்டுக் கொண்டவுடன், வேதங்களும் வால்மீகியின் குழந்தையாக, இராமாயணமாக வந்துவிட்டது. அந்த இராமாயணம் முழுக்க எங்கு பார்த்தாலும் தர்மத்தைத் தான் சொல்லி இருக்கிறது.
*
(ஆதார நூல்: தெய்வத்தின் குரல், பாகம் 1, பகுதி 'ஸ்ரீராமன்', பக்கங்கள் 596, 597):
"இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம், அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?" என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள், ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்த போது மனுஷ்ய வேடத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்துப் பேசுகிறார்கள்.
ஒரு நாடகம் நடக்கிறது, இராமாயண நாடகம் தான். அதில் லவ; குசர்களை வால்மீகி இராமனிடம் அழைத்து வருகிறார், ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்கார் இராமனாக வேடம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்த பிள்ளைகளே நாடகத்தில் லவ; குசர்களாக நடிக்கிறார்கள். நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து 'இந்த குழந்தைகள் யார்' என்று கேட்கிறார். ராமசுவாமி அய்யங்காருக்குத் தன்னுடைய சொந்த பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி 'இவர்கள் ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமசுவாமி அய்யங்கார்! என்று பதில் சொன்னால் எத்தனை ரசாபாசமாக இருக்கும்? வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத் தான் நடிக்க வேண்டும்.
ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேடம் போட்டுக் கொண்டவுடன், வேதங்களும் வால்மீகியின் குழந்தையாக, இராமாயணமாக வந்துவிட்டது. அந்த இராமாயணம் முழுக்க எங்கு பார்த்தாலும் தர்மத்தைத் தான் சொல்லி இருக்கிறது.
*
(ஆதார நூல்: தெய்வத்தின் குரல், பாகம் 1, பகுதி 'ஸ்ரீராமன்', பக்கங்கள் 596, 597):
இராவணன் சீதா தேவியைக் கடத்திச் சென்றது பழிவாங்கும் பொருட்டா அல்லது முறையற்ற காம எண்ணத்திலா? (ஆதாரபூர்வ விளக்கங்கள):
'தங்கையான சூர்ப்பனகை மூக்கறுபட்டதால் அதற்குப் பழிவாங்கும் பொருட்டே தேவி சீதையை இராவணன் கடத்திச் சென்றானே அன்றி காம எண்ணத்தினால் அல்ல' என்று நாத்தீகக் கழகங்களும், இந்து மத விரோதப் போக்கினைக் கொண்ட கட்சிகளும் பெருமுனைப்புடன் மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். இனிக் கம்ப இராமாயணத்தின் 'ஆரண்ய காண்டம் - சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' வாயிலாக உண்மையினை உணர்ந்துத் தெளிவுறுவோம் (மொத்தம் 170 பாடல்களைக் கொண்டது இப்படலம்).
சூர்ப்பனகை முன்னமே திருமணம் ஆனவள், எனினும் இராம; இலட்சுமணர்களின் மீது காம வயப்பட்டுப் பலவந்தமாக நெருங்க முயல்கின்றாள், அது நிறைவேறாது போகவே கடும் கோபமுற்று அன்னை சீதையைக் கொல்ல முயல்கின்றாள், அதனால் இலக்குவனால் மூக்கறு படுகின்றாள். நடந்தது இவ்வாறிருக்க இராவணனிடத்திலோ 'அண்ணா! விண்ணவரும் வியக்கும் சீதையெனும் பேரழகியைக் கண்டு அவளை உனக்குப் பரிசளிக்கும் பொருட்டு இழுத்து வர முனைந்தேன், அங்கிருந்த இராம; இலட்சுமணர்களோ என் மூக்கை அறுத்ததோடு உன்னையும் ஆண்மையற்றவன்; பேடி என்று பலவாறாகப் தூற்றினர்' என்று முழுவதுமாய் மாற்றிக் கூறுகின்றாள்.
மெதுமெதுவே அன்னை சீதையின் அழகினைப் பற்றிப் பலப்பல கூறி இராவணனின் மனதினில் காம நெருப்பினைப் பற்றச் செய்கின்றாள், இனி 'சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறும் பகுதிகளின் தலைப்பினைக் கண்டுத் தெளிவுறுவோம்'.
1. சூர்ப்பனகை வந்த போது இராவணன் இருந்த நிலை
2. சூர்ப்பனகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்
3. அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்
4. யார் செய்தது இது என இராவணன் வினவல்
5. இராவணன் நடந்தது கூற வேண்டுதல்
6. சூர்ப்பனகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்
7. இராவணன் தன்னையே பழித்து மொழிதல்
8. என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்
9.சூர்ப்பனகை நடந்தது நவிலல்
10. நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்
11. சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்
12. இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்
13.இராவணனின் முற்றிய காம நோய்
14. இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்
15. இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
16. இராவணன் நிலவைப் பழித்தல்
17. இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்
18. இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்
19. பிறையைக் குறை கூறல்
20.இராவணன் இருளினை ஏசுதல்
21. சீதையின் உருவெளிப்பாடு காண்டல்
22. இராவணன்-சூர்ப்பனகை உரையாடல்
23. சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்
24. இராவணன் தென்றலைச் சீறுதல்
25. இராவணன் மாரீசனை அடைதல்
மேற்குறித்துள்ள பகுதிகளுள், 11,12,13 பகுதிகளான 'சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்', 'இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்', 'இராவணனின் முற்றிய காம நோய்' ஆகியவை 'இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றது முறையற்ற காம எண்ணத்தின் பொருட்டே' என்று மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
அனைவரும் அவசியம் முறையான கம்ப இராமாயண உரை நூலினை வாங்கி ஆரண்ய காண்டத்தின் 'சூர்ப்பனகைப் படலம், சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' ஆகியவற்றை முழுவதுமாய்ப் படித்துத் தெளிவுறுவோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
சூர்ப்பனகை முன்னமே திருமணம் ஆனவள், எனினும் இராம; இலட்சுமணர்களின் மீது காம வயப்பட்டுப் பலவந்தமாக நெருங்க முயல்கின்றாள், அது நிறைவேறாது போகவே கடும் கோபமுற்று அன்னை சீதையைக் கொல்ல முயல்கின்றாள், அதனால் இலக்குவனால் மூக்கறு படுகின்றாள். நடந்தது இவ்வாறிருக்க இராவணனிடத்திலோ 'அண்ணா! விண்ணவரும் வியக்கும் சீதையெனும் பேரழகியைக் கண்டு அவளை உனக்குப் பரிசளிக்கும் பொருட்டு இழுத்து வர முனைந்தேன், அங்கிருந்த இராம; இலட்சுமணர்களோ என் மூக்கை அறுத்ததோடு உன்னையும் ஆண்மையற்றவன்; பேடி என்று பலவாறாகப் தூற்றினர்' என்று முழுவதுமாய் மாற்றிக் கூறுகின்றாள்.
மெதுமெதுவே அன்னை சீதையின் அழகினைப் பற்றிப் பலப்பல கூறி இராவணனின் மனதினில் காம நெருப்பினைப் பற்றச் செய்கின்றாள், இனி 'சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறும் பகுதிகளின் தலைப்பினைக் கண்டுத் தெளிவுறுவோம்'.
1. சூர்ப்பனகை வந்த போது இராவணன் இருந்த நிலை
2. சூர்ப்பனகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்
3. அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்
4. யார் செய்தது இது என இராவணன் வினவல்
5. இராவணன் நடந்தது கூற வேண்டுதல்
6. சூர்ப்பனகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்
7. இராவணன் தன்னையே பழித்து மொழிதல்
8. என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்
9.சூர்ப்பனகை நடந்தது நவிலல்
10. நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்
11. சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்
12. இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்
13.இராவணனின் முற்றிய காம நோய்
14. இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்
15. இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
16. இராவணன் நிலவைப் பழித்தல்
17. இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்
18. இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்
19. பிறையைக் குறை கூறல்
20.இராவணன் இருளினை ஏசுதல்
21. சீதையின் உருவெளிப்பாடு காண்டல்
22. இராவணன்-சூர்ப்பனகை உரையாடல்
23. சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்
24. இராவணன் தென்றலைச் சீறுதல்
25. இராவணன் மாரீசனை அடைதல்
மேற்குறித்துள்ள பகுதிகளுள், 11,12,13 பகுதிகளான 'சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்', 'இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்', 'இராவணனின் முற்றிய காம நோய்' ஆகியவை 'இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றது முறையற்ற காம எண்ணத்தின் பொருட்டே' என்று மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
அனைவரும் அவசியம் முறையான கம்ப இராமாயண உரை நூலினை வாங்கி ஆரண்ய காண்டத்தின் 'சூர்ப்பனகைப் படலம், சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' ஆகியவற்றை முழுவதுமாய்ப் படித்துத் தெளிவுறுவோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இராமாயணத்தில் ஆரிய சூழ்ச்சியா? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):
நான்முகக் கடவுளான பிரமனின் 10 புதல்வர்களுள் ஒருவர் புலஸ்திய மகரிஷி, அந்தணர் மரபினரான இவரின் புதல்வர் விஸ்ரவ முனிவர், விஸ்ரவரின் முதல் மனைவியான கைகேசிக்கு பிறந்தவர்கள் நால்வர், இராவணன்; கும்பகர்ணன்; விபீஷணன் மற்றும் சூர்ப்பனகை. ஆக இராவணன் அந்தண மரபு என்பது தெளிவு, சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் காமம் கொண்டு நெருங்குகையில் தசரத மைந்தன் பலப்பல அறங்களைக் கூறியும் அவள் எண்ணம் மாறாததால் இறுதியாய் 'பெண்ணே! நம் இருவரின் மரபும் வெவ்வேறு, நீயோ அந்தண மரபு, நானோ சத்ரிய வம்சமான அரச குலம் ஆதலின் இது பொருந்தாது' என்று கூறுகின்றார்.
கவிச்சக்கரவர்த்தி இதனை 'அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' எனும் இறுதி வரியில் பதிவு செய்கின்றார்.
(கம்ப இராமாயணம்: ஆரண்ய காண்டம்: சூர்ப்பணகைப் படலம், திருப்பாடல் 49)
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான்.
வால்மீகி; கம்பர் இருவருமே மிகத் தெளிவாக இராவணன் அந்தண மரபினன் என்றுச் சுட்டியுள்ளனர், மேலும் வால்மீகி வேடர் குலத்தினர், கம்பரோ பாணர் மரபினர், ஆக இராமாயணத்தை எழுதியவரும் பிராமணர் அல்லர் அதில் எழுதப் பெற்றுள்ள நாயகனான ஸ்ரீராமரும் பிராமணர் அல்லர்; சத்ரிய வம்சத்தினர் எனில் ஆரிய சூழ்ச்சி இதில் எங்கு தான் வருகின்றது? என்பதே நகைப்புக்குரிய கேள்வி.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கவிச்சக்கரவர்த்தி இதனை 'அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' எனும் இறுதி வரியில் பதிவு செய்கின்றார்.
(கம்ப இராமாயணம்: ஆரண்ய காண்டம்: சூர்ப்பணகைப் படலம், திருப்பாடல் 49)
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான்.
வால்மீகி; கம்பர் இருவருமே மிகத் தெளிவாக இராவணன் அந்தண மரபினன் என்றுச் சுட்டியுள்ளனர், மேலும் வால்மீகி வேடர் குலத்தினர், கம்பரோ பாணர் மரபினர், ஆக இராமாயணத்தை எழுதியவரும் பிராமணர் அல்லர் அதில் எழுதப் பெற்றுள்ள நாயகனான ஸ்ரீராமரும் பிராமணர் அல்லர்; சத்ரிய வம்சத்தினர் எனில் ஆரிய சூழ்ச்சி இதில் எங்கு தான் வருகின்றது? என்பதே நகைப்புக்குரிய கேள்வி.
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சைவத் திருமுறைகளில் ரிக் வேதச் சிறப்பு:
'சைவ சமயத்தின் அடிநாதமான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களுள், ரிக் வேதத்தின் ஏற்றத்தினை நால்வர் பெருமக்களும் அருணகிரிப் பெருமானும் எவ்வாறு பதிவு செய்துள்ளனர்' என்பதனை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம்,
'பூவார் கொன்றை' என்று துவங்கும் சீகாழித் திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:
சிவபெருமான் ரிக் வேத மந்திரங்களில் முழுவதுமாய் நிறைந்து விளங்கும் தன்மையினை 'இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்' என்று ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்றார்,
-
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே.
திருப்பேரெயில் தல தேவாரத்தின் 6ஆம் திருப்பாடல்:
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே.
திருப்பேரெயில் தல தேவாரத்தின் 6ஆம் திருப்பாடல்:
ரிக் வேத மந்திரங்களால் தொழுபவர்களின் துயரினைச் சிவபெருமான் போக்கி அருள்வதாகப் பதிவு செய்துப் போற்றுகின்றார் நாவுக்கரசு சுவாமிகள் ('இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்'),
-
திருக்கு வார்குழல் செல்வன் சேவடி
இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்களாற்றறப்
பெருக்குவாரவர் பேரெயிலாளரே
திருக்கானாட்டுமுள்ளூர் தலத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:
திருக்கு வார்குழல் செல்வன் சேவடி
இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்களாற்றறப்
பெருக்குவாரவர் பேரெயிலாளரே
திருக்கானாட்டுமுள்ளூர் தலத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:
ரிக் வேதங்களை ஓதும் அந்தணர்கள் அத்தலத்தில் நிறைந்து விளங்கும் தன்மையினைப் பதிவு செய்கின்றார் சுந்தரர் ('இருக்குவாய் அந்தணர்கள்'),
-
செருக்குவாய்ப் பைங்கண் வெள்ளரவரையினானைத்
தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலரொக்கும் திருமேனியானை
முன்னிலையாய் முழுதுலகமாய பெருமானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
வேள்வியிருந்திருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டுமுள்ளூரில் கண்டுதொழுதேனே
திருவாசகத்தின் திருப்பள்ளியெழுச்சி 4ஆம் திருப்பாடல்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேதியர்கள் ரிக் வேத மந்திரங்களால் போற்றுவதாகப் பதிவு செய்கின்றார் மணிவாசப் பெருமான் ('இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்'),
செருக்குவாய்ப் பைங்கண் வெள்ளரவரையினானைத்
தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலரொக்கும் திருமேனியானை
முன்னிலையாய் முழுதுலகமாய பெருமானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
வேள்வியிருந்திருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டுமுள்ளூரில் கண்டுதொழுதேனே
திருவாசகத்தின் திருப்பள்ளியெழுச்சி 4ஆம் திருப்பாடல்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேதியர்கள் ரிக் வேத மந்திரங்களால் போற்றுவதாகப் பதிவு செய்கின்றார் மணிவாசப் பெருமான் ('இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்'),
-
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டின்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
'அருக்கு மங்கையர்' என்று துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்:
'சப்த ரிஷிகளான அகத்தியர்; அத்திரி; பரத்வாஜர்; கௌதமர்; ஜமதக்னி; வசிஷ்டர்; விஸ்வாமித்ரர் ஆகியோருக்கு முருகப் பெருமான் ரிக் வேத மந்திரங்களை உபதேசித்து அருளினான்' என்று அருணகிரிப் பெருமான் பதிவு செய்கின்றார்,
..
இருக்கு மந்திரம் எழுவகை முனிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேளென்
...
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டின்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
'அருக்கு மங்கையர்' என்று துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்:
'சப்த ரிஷிகளான அகத்தியர்; அத்திரி; பரத்வாஜர்; கௌதமர்; ஜமதக்னி; வசிஷ்டர்; விஸ்வாமித்ரர் ஆகியோருக்கு முருகப் பெருமான் ரிக் வேத மந்திரங்களை உபதேசித்து அருளினான்' என்று அருணகிரிப் பெருமான் பதிவு செய்கின்றார்,
..
இருக்கு மந்திரம் எழுவகை முனிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேளென்
...
Subscribe to:
Comments (Atom)






