திருநாவுக்கரசர் தேவாரத்தில் சபரிமலை ஐயன்:

சைவத் திருமுறைகளின் பல்வேறு பகுதிகளில் சாஸ்தா பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. சங்கர நாராயண தத்துவங்களின் சங்கமத்தினின்றும் தோன்றிய மகா சாஸ்தாவைத் தமிழ்ப்படுத்தி 'சாத்தன், மாசாத்தனார்' எனும் திருநாமங்களால் சைவ சமய அருளாளர்கள் குறித்து வந்துள்ளனர்.

பின்வரும் திருப்பயற்றூர் தேவாரப் பாடலில் 'சாத்தனை மகனாய் வைத்தார்' என்று பதிவு செய்கின்றார் நாவுக்கரசு சுவாமிகள், 
-
பார்த்தனுக்கருளும் வைத்தார் பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனாய் வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூரனாரே!!

No comments:

Post a Comment