கருங்கடல் வண்ணரான மகா சாஸ்தா (கந்த புராண விளக்கங்கள்):

சிவ விஷ்ணு தத்துவங்களின் சங்கமத்தினின்றும் தோன்றிய மகா சாஸ்தாவைப் பொன்நிற மேனியராய் உருவகித்து வரையப் பெற்றுள்ள பல படங்களை இணைய தளங்களிலும் முகநூல் பதிவுகளிலும் காண்கின்றோம். இருப்பினும் கச்சியப்பரின் கந்த புராணம் 'மைக்கருங்கடல் மேனியர்' என்றே ஹரிஹர புத்திரரின் திருமேனி நிறத்தினை வர்ணிக்கின்றது,
-
(அசுர காண்டம்: மகா சாத்தா படலம்: திருப்பாடல் 49)
மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்

இறைவன் எத்தகைய வடிவத்திலும் நிறத்திலும் தோன்றும் சர்வ வல்லமை பொருந்தியவன் எனினும் புராணங்கள் முன்னிறுத்தும் இறை வடிவங்களை அதன் வழி நின்று உபாசிப்பதே நலன்கள் யாவையும் பெற்றுத்தர வல்லது. 'மழை வண்ணத்து அண்ணலே' என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுவார் கவிச்சக்கரவர்த்தி, ஹரிஹர குமாரர் ஆகையால் 'ஹரியாகிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமேனி நிறத்தில் தோன்றி அருள்பவர் மகா சாஸ்தா' எனும் புரிதல் அவசியமாகின்றது (சிவ சிவ)!!!.

No comments:

Post a Comment