ஆன்மீக முருகனும் அரசியல் முருகனும்.

அறிவிலிகளான பிரிவினைவாதிகள் உள்நோக்கத்தோடு உருவாக்கியுள்ள (இப்பதிவில் பெருக்கல் குறியோடு இணைத்துள்ள) போலி உருவத்தினை ஆன்மீகப் பதிவுகளில் ஒரு பொழுதும் பயன்படுத்தாது இருப்போம், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய நேரமிது.

இவர்கள் முருகக் கடவுளைத் தெய்வமாக ஒருபொழுதும் ஏற்றதில்லை மாறாக 'முன்பு வாழ்ந்திருந்த முன்னோர்களுள் ஒருவரையே, அதாவது முன்னோரை வணங்குதல் என்ற முறையில் முப்பாட்டனாக ஏற்கின்றோம்' என்றே பிதற்றி வருகின்றனர்.

இவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் வழிபாட்டு மரபு, அருளாளர்கள், ஞானிகள், தமிழ்ப் பாடல் தொகுப்புகள் என்று எதையுமே ஏற்கவில்லை, அங்கீகரிக்கவும் இல்லை. இவர்களுக்கு அருணகிரிநாதர்; பாம்பன் சுவாமிகள்; வாரியார் சுவாமிகள்; பாலன் தேவராய சுவாமிகள், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர் என்று இதற்கு முன்னர் வாழந்த ஞானிகள் எவரைப் பற்றியும் ஒருசிறிதும் அக்கறையில்லை, திருப்புகழ் துவங்கி எவ்விதத் திருமுறைகளையும் இவர்கள் எந்த இடத்திலும் மறந்தும் பேசியதில்லை. எவ்வித முருகன் ஆலயத்தையும் சிறப்பித்ததில்லை.

சிவன் முருகன் என்று ஏக வசனத்தில் பேசிவரும் இந்த கூட்டம் சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்குமே சம்பந்தம் இல்லை என்று உளறி வரும் விந்தையை என்னென்று கூறுவது? இவர்களின் தலைமைப் பைத்தியம் 'நம் முருகப் பெருமான் உள்ளிட்ட இந்து மத தெய்வங்களை, எழுதுவதற்கே கூசும் இழிவான வார்த்தைகளால் வசைபாடியுள்ள காணொளிகள்' யூட்யூபில் ஏராளமாக உலா வருகின்றன.

இனி கந்த சஷ்டிக் கவசத்தின் வழி நின்று நம் ஆறுமுக தெய்வத்தின் திருவுருவ வர்ணனையைக் காண்போம்,
-
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
-
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
-
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
-
இருதொடையழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

முருகப் பெருமானைக் போற்றும் அனைத்து தெய்வீகப் பாடல்களையும், ஞானிகளையும் முற்றிலும் புறந்தள்ளி விட்டு, விஷமத்தனமான உருவமொன்றினைப் போலியாக வடிவமைத்து அதனை 'முருகன்' என்று பிரகடனப் படுத்துகின்றான் இந்த அறிவிலி, இவர்களின் நோக்கம் நம் சமயக் கலாச்சாரத்தில் குழப்பம் விளைவித்துப் பிரிவினை அரசியல் புரிவது மற்றும் மதமாற்று சக்திகளுக்கு மறைமுகமாகத் துணை நிற்பது ஆகியவையே.

இவை எதையுமே சிந்திக்காமல் நம் இந்து தர்ம சகோதரர்கள் தங்களின் ஆன்மீகப் பதிவுகளுக்கு இந்த போலி உருவத்தைப் பயன்படுத்தத் துவங்கி விட்டார்கள், இனியேனும் இப்போலிப் படம் குறித்த விழிப்புணர்வோடு இருப்போம்.

No comments:

Post a Comment