தமிழ்; வடமொழி இரண்டையும் ஒருமைப்படுத்திப் போற்றும் சைவத் திருமுறைகள்:

(திருஞானசம்பந்தர் தேவாரம்):

'பட்டம் பால்நிற' என்று துவங்கும் 'திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்' திருப்பதிகத்தின் 7ஆம் திருப்பாடல்:

தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழினரம்பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்தனைய வலைகடல் கடையஅன்றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
-
'மானினேர்விழி' என்று துவங்கும் திருஆலவாய்த் திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடல்:

சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமைசேர்
கந்துசேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளியேன் அலேன் திருஆலவாயரன் நிற்கவே
-
'பொன் திரண்டன்ன' என்று துவங்கும் திருஅச்சிறுப்பாக்கத் திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடல்:

மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையும் சிறையணிபுனலும் சென்னி மேலுடையர் என்சென்னிமேலுறைவார்
தம்மலரடிஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்கொன்றை அணிந்தஎம்அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே!!!

(திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்):

'வானவன் காண்' என்று துவங்கும் திருச்சிவபுரத் திருப்பதிகத்தின் 1ஆம் திருப்பாடல்:

வானவன்காண் வானவர்க்கு மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடினான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தியாடும்
கானவன்காண் கானவனுக்கருள் செய்தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத்தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் தான்காண்
சிவனவன்காண் சிவபுரத்தெம் செல்வன் தானே!!!
-
'முற்றிலாமுலை' என்று துவங்கும் திருக்கடம்பந்துறை திருப்பதிகத்தின் 3ஆம் திருப்பாடல்: 

ஆரியம் தமிழோடிசையானவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரி கை உடையான் கடம்பந்துறைச்
சீரியல் பத்தர் சென்றடைமின்களே!!!
-
'நம்பனை நால்வேதம் கரை கண்டானை' என்று துவங்கும் திருஆவடுதுறை திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோடாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறும்கொன்றை மாலையானைக்
கோலமா நீலமிடற்றான் தன்னைச்
செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத்
திருமார்பில் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே!!!
-
'தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காட்டுத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:

மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே!!!

(11ஆம் திருமுறை திருத்தொண்டர் திருவந்தாதி)

72ஆம் திருப்பாடல்:

தொகுத்த வடமொழி தென்மொழி
    யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
    வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை !அம்பலத்
    தான் மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் !பாடவல்
    லோரென்பர் உத்தமரே!!!

(பெரிய புராணம்): 

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணத்தின் 3ஆம் திருப்பாடல்:

மன்னவரும் பணிசெய்ய
    வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
    பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
    எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
    நயந்தளிப்பார் ஆயினார்

No comments:

Post a Comment