சைவத் திருமுறைகளில் சாம வேதச் சிறப்பு:

நால்வேதங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது இசை வடிவான சாம வேதம், இனி தேவார மூவரும், தெய்வச் சேக்கிழாரும், அருணகிரிப் பெருமானும் சாம வேதச் சிறப்பினை எவ்வாறு போற்றிப் பரவியுள்ளனர் என்று இப்பதிவினில் உணர்ந்துத் தெளிவுறுவோம், 

திருஞானசம்பந்தர் தேவாரம்:
1. 'கண்ணுதலானும்' என்று துவங்கும் திருப்புகலி திருப்பதிகத்தில் 'சாமநல் வேதனும் தக்கன்தன் வேள்வி தகர்த்தானும்

2. 'இறையவன் ஈசன்எந்தை' என்று துவங்கும் திருப்பிரமபுர திருப்பதிகத்தில் 'சடையினன் சாமவேதன்'

3. 'பொங்குநூல் மார்பினீர்' என்று துவங்கும் திருவிடைமருதூர் திருப்திகத்தில் 'தங்கு செஞ்சடையினீர் சாமவேதம் ஓதினீர்

4. திருவாழ்கொளிபுத்தூர் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே 'சாகை ஆயிரமுடையார சாமமும் ஓதுவதுடையார்'

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்:
1. 'சந்திரனை மாகங்கை' என்று துவங்கும் திருவதிகை திருப்பதிகத்தில் 'சாம வேத கந்தருவம் விரும்புமே'

2. 'மடக்கினார்' என்று துவங்கும் திருவதிகை திருப்பதிகத்தில் 'பாடினார் சாம வேதம் பாடிய பாணியாலே'

3. 'வெள்ளத்தைச் சடையில்' என்று துவங்கும் திருவொற்றியூர் திருப்பதிகத்தில் 'சாமத்து வேதமாகி நின்றதோர் சயம்பு தன்னை'

சுந்தரர் தேவாரம்:
1. 'ஆலம்தான் உகந்து' என்று துவங்கும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகத்தில் 'சாம வேதம் பெரிதுகப்பானை'

2. 'கொடுகு வெஞ்சிலை' என்று துவங்கும் திருமுருகன்பூண்டி திருப்பதிகத்தில் 'தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி'

சேக்கிழார் - பெரியபுராணம்:
1. குங்கிலியக் கலய நாயனார் புராணத்தில், 'குடங்கையின்' என்று துவங்கும் 3ஆம் திருப்பாடலில் 'வைதிக மறையோர் செய்கைச் சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்'

2. திருஞானசம்பந்த மூர்த்தி புராணத்தின் 97ஆம் திருப்பாடலில் 'மங்கல தூரியம் துவைப்பார் மறைச்சாமம் பாடுவார்'

அருணகிரிநாதர் - திருப்புகழ்:
1. 'சீருலாவிய' என்று துவங்கும் திருப்போரூர் திருப்புகழில் 'சாம வேதியர் வானவரோதி நாண்மலர் தூவிய தாளில் வீழ வினாமிக அருள்வாயே'

 



No comments:

Post a Comment