ஸ்ரீராமர் பாலம் உண்மையிலேயே கடலில் உருவாக்கப் பெற்றதா?

அருணகிரிப் பெருமான் 'துடிகொள் நோய்களோடு வற்றி' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருஇராமேஸ்வரத் தலத்திலுள்ள கடற்பரப்பில் பெரும் மலைக் கற்களாலான பாலமொன்றினை அமைத்துச் சென்று, இலங்கையினை அடைந்துக் கொடியவனான இராவணனைக் கொன்று வெற்றி வாகை சூடிய நிகழ்வினைப் பின்வரும் வரிகளில் பதிவு செய்கின்றார்,
-
கடிதுலாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க்
-
களமுறானை தேர் நுறுக்கி
     தலைகளாறு நாலு பெற்ற
          அவனை வாளியாலடத்தன் மருகோனே

மற்றுமொரு அகச்சான்றினையும் காண்போம், சிவபரம்பொருளின் திருவாக்காலேயே 'நாவுக்கரசர்' எனும் அற்புதத் திருநாமம் பெற்றுள்ள நம் அப்பர் சுவாமிகளும் இதே நிகழ்வினைத் தம்முடைய திருஇராமேஸ்வரம் தேவாரத் திருப்பதிகத்தின் பின்வரும் வரிகளால் ஆவணப்படுத்துகின்றார்.
-
கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட்டுண்டு நானே!!!

No comments:

Post a Comment