திருக்குறளிலும் சைவத் திருமுறைகளிலும் இறைவனின் எண்குணங்கள்:

திருவள்ளுவர் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் பரம்பொருளான இறைவனின் எண்குணங்களைக் குறிப்பிடுகின்றார். நால்வேதங்களை மையமாகக் கொண்டு சமைக்கப் பெற்றிருக்கும் இந்து தர்மத்தில் மட்டுமே இந்த எண்குணக் கோட்பாடு பேசப் பெற்றுள்ளது என்பது முக்கியக் குறிப்பு.
-
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

இந்து தர்மம் பறைசாற்றும் இறைவனின் எண்குணங்கள் பின்வருமாறு: தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியிருத்தல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றலுடைமை மற்றும் வரம்பில்லாத இன்பமுடைமை.

இனி இந்து தர்மத்தின் அங்கமான சைவத் திருமுறைகளிலிருந்து இறைவனின் எண்குணம் குறித்த சில அகச் சான்றுகளைக் காண்போம்,
-
திருநாவுக்கரசர் தேவாரம்:
எட்டுக்கொலாம் அவர்ஈறில் பெருங்குணம்
-
சுந்தரர் தேவாரம் - திருக்கானாட்டுமுள்ளூர்:
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை
இறையவனை மறையவனை எண்குணத்தினானை
-
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி: திருப்பாடல் 15:
முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்துணர்வு என்றருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!!!

No comments:

Post a Comment