திருஅச்சிறுப்பாக்க தேவாரத்தில் தமிழும் வடமொழியும் (தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழல் சேர):

'தெய்வத் தமிழ் மொழியிலுள்ள பனுவல்களும், வடமொழியிலுள்ள நால்வேதப் பாராயணங்கள்; தோத்திரங்கள்; மற்றும் அர்ச்சனை மந்திரங்களும் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சனை மலர்களாகச் சென்று சேர்கின்றன' என்று வைதீக மொழியையும்; தமிழையும் ஒருமைப்படுத்தியும், சிறப்பித்தும் போற்றுகின்றார் நம் ஞானசம்பந்தப் பெருமான். 

(திருஅச்சிறுப்பாக்கம் - திருஞானசமபந்தர் தேவாரம் - திருப்பாடல் 4)
மைம்மலர்க்கோதை மார்பினர் எனவும் மலைமகள்அவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையும் சிறையணிபுனலும் சென்னிமேலுடையர் என்சென்னிமேலுறைவார்
தம்மலரடிஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழல்சேர
அம்மலர்க்கொன்றை அணிந்தஎம்அடிகள் அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே!!!

No comments:

Post a Comment