பெரியாழ்வார் பாசுரத்தில் ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்கள்:

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பெரியாழ்வார் பின்வரும் திருப்பாசுரத்தில், 'ஓம் நமோ நாராயணாய எனும் அஷ்டாஷர மந்திரத்தை உச்சரிக்காத நாட்களும், ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேத  மந்திரங்களால் பூசிக்காத நாட்களும் உண்ணாதொழிந்த நாட்களே' என்று வைதீக தர்மத்தின் அடிநாதமான நான்மறைகளின் ஏற்றத்தினைப் பதிவு செய்துப் போற்றுகின்றார், 

(பெரிய திருமொழி - நான்காம் பத்து: 10ஆம் திருமொழி):
கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன்நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை ஓவாதே நமோ நாரணாவென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுஉன் பாதம்
நண்ணா நாள்அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே

No comments:

Post a Comment