இந்து தர்மம் - புராணங்களும் இதிகாசங்களும்:

நிகழ்வுகள் நடந்தேறும் கால கட்டத்திலேயே அவை தொகுக்கப்பட்டு எழுதப் பெறுவது இதிகாசங்கள், நிகழ்வுகள் நடந்தேறி எண்ணிறந்த யுகங்களுக்குப் பின்னர் பிறிதொரு காலகட்டத்தில் தொகுக்கப் பெறுவது புராணங்கள். திரேதா யுகத்தில் இராமாயண காவியத்தினை இயற்றியருளிய வால்மீகி முனிவரும், துவாபர யுகத்தில் மாபாரதம் புனைந்தருளிய வேத வியாசரும் அந்தந்த காலகட்டங்களிலேயே வாழ்ந்தருளிய மாமுனிவர்கள், மேலும் தத்தமது இதிகாசங்களில் இப்பெருமக்கள் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வந்துள்ளனர். பதினெண் புராணங்களோடு எண்ணிறந்த உப புராணங்களையும் வியாச மகரிஷி துவாபர யுக காலகட்டத்திலேயே இயற்றியருளியுள்ளார்.

No comments:

Post a Comment