வியாசர் எத்தனை வியாசரோ?

'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்பது பொருள். 'வியாசர்' என்பது பதவியைக் குறிக்க வந்த பதம், வியாசம் செய்பவர் 'வியாசர்'.

சதுர்யுகம் என்று குறிக்கப் பெறும் கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களில், துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை 'ரிக், யஜூர், சாம, அதர்வனம்' எனும் நான்காக பகுத்தளிப்பார், அந்த தவசீலரே 'வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.

71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடந்தேறி வருவது வைவஸ்வத மன்வந்திரத்தின் 28ஆம் சதுர்யுகமாகும், 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாச' பதவியை வகித்து வந்துள்ளனர், இவர்களின் பெயர்களையும் வரலாற்றையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகின்றது. இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' என்பார் 'வேத வியாசர்' என்று போற்றப் பெறுகின்றார்.

18 புராணங்கள்; எண்ணிறந்த உப புராணங்கள்; மகாபாரதம்; பிரம்ம சூத்திரம் ஆகியவைகளை வடமொழியில் அருளியுள்ளார் வேத வியாசர்.

No comments:

Post a Comment