காவடி என்றால் என்ன? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை' தொகுப்பிலிருந்து)

(கேள்வி): காவடி என்றால் என்ன? அதன் உட்கருத்து யாது?

(பதில்): சூரபத்மனுடைய ஆசிரியன் இடும்பன், அவன் அகஸ்தியருடைய ஏவலின்படி கயிலாயத்திலிருந்து சிவமலை, சக்தி மலை என்ற இரு மலைகளையும் காவடியாகக் கட்டிக் கொண்டு வந்தான். அதுமுதல் காவடி வழிபாடு ஏற்பட்டது. பாரமான பொருளை இரண்டாகப் பிளந்து தோளில் சுமந்து வருவதற்குக் காவடி என்று பொருள். பாவச் சுமைகளை ஆண்டவன் திருவடியில் அர்ப்பணித்து விடுவதே இதன் உட்பொருள்.

(குமுதம் வினா விடை (பக்கம் 139), குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

No comments:

Post a Comment