இராமாயணமும் மகாபாரதமும் உண்மையா? (திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினா விடை தொகுப்பிலிருந்து'):

(கேள்வி): திருவனந்தபுரத்தில் ஒரு சொற்பொழிவாளர் இராமாயணமும் பாரதமும் நடந்த கதைகள் அல்ல, வியாசருக்கும் வால்மீகிக்கும் மானசீகமாக நடந்தவைகள் தான். இப்படி இராமரும், கிருஷ்ணரும் மனிதர்களாக இந்த உலகத்தில் பிறந்ததாகச் சொல்லும் எல்லாரும் ஊரை ஏமாற்றுகிறார்கள்' என்று சொல்கின்றார். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

(பதில்): இராமாயணமும் மகாபாரதமும் உண்மையில் நடந்த வரலாறுகள் தான். இராமாயண வரலாற்றை புறநானூறு அகநானூறு பரிபாடல் முதலிய சங்க நூல்கள் கூறுகின்றன.
-
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரப் பிரபந்தம் முதலிய அருள் நூல்கள் கூறுகின்றன.

"அடுத்தானை உரித்தானை அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தானை" - தேவாரம்

திருக்குரான் பொய் கூறுகின்றது என்று ஒரு முஸ்லீம் அன்பர் கூறுவாரா? பைபிள் பொய் கூறுகின்றது என்று ஒரு கிறித்துவர் கூறுவாரா? கூறமாட்டார் அல்லவா?

ஆகவே, இறைவனை நேரில் கண்ட பரம ஞானிகள் திருவாய் மலர்ந்த தேவாரம், திருப்புகழ், பிரபந்தங்களில் பேசப்படுகின்ற இராமாயணமும், பாரதமும் கட்டுக் கதையென்று கூறுவது 'என் தாய் விபச்சாரி' என்று கூறுவதோடு ஒக்கும்.

(பக்கம் 137, குமுதம் வினா விடை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்):

No comments:

Post a Comment