பசுவின் உடலிலிருந்து வரும் பால் எப்படி சைவ உணவாக முடியும்? திருமுருக வாரியார் சுவாமிகள் விளக்கம்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து)

புலால் உயிர்க் கொலையினால் கிடைக்கின்றது. பால் ஜீவ ஹிம்சையின்றிக் கிடைக்கின்றது. கறக்கின்ற பாலைப் பருகுவது குற்றமன்று. அது அசைவமாகாது. புலால் தீய குணங்களை வளர்க்கும். பால் தூய குணங்களை நல்கும். பசுவுக்கு மட்டும் அதன் கன்றுக்கு மேற்பட்ட பால் பெருக்கத்தை இறைவன் கொடுத்திருக்கிறான். பால் கறக்கவில்லையானால் பசுவுக்குத் துன்பம். கன்றுக்கு இரு மடிகளை விட்டு மற்ற இரு மடிகளில் பால் கறக்க வேண்டும். கன்றுக்குப் பால் விடாமல் கறந்து குடிப்பது தான் பாவம். பசுவின் பால் புனிதமானது. சத்வ குணத்தைத் தரவல்லது.

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்" என்று அவ்வைப் பிராட்டியார் விநாயகரைக் குறித்துப் பாடிய பாடலாலும் அறிக.

பெற்றவள் சிறப்புத் தாய், பசு பொதுத் தாய்.

No comments:

Post a Comment