ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் (திருமுருக வாரியார் சுவாமிகளின் அற்புத விளக்கம்):

(சங்கநிதி பதுமநிதி என்று துவங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலின் இறுதி மூன்று வரிகள்):
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே
-
ஆவுரிரித்துத் தின்பது (மாமிசம் உண்பது) அன்பிலாமை, இறைவனை நினைப்பது அன்புடைமை. அன்பும் அன்பிலாமையும் ஒரே சமயத்தில் ஒருவரிடம் நிகழா. இரவும் பகலும் ஒரே சமயத்தில் தோன்றுவதில்லை. சிவனுக்கு அன்பு செய்து கொண்டே ஆவுரித்துத் தின்று உழலுதல் பொருந்தாது. அவ்வாறு செய்வாராயின் அது அன்புடைமையாகாது. நேற்றுவரை ஆவுரித்துத் தின்றுழன்ற ஒருவன், இன்று அதனின்றும் நீங்கி எங்கும் சிவனைக் கண்டு சிவபக்தி புரிவானாயின் அவன் எமது கடவுள். முன்னைய நிலையை நோக்காமல் வணங்குதல் வேண்டும் என்று பொருள் கொள்க.
*
(ஆதார நூல்: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பெரிய புராணம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், பக்கம் 542)

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போமல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்,
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே!!!

No comments:

Post a Comment