புண்ணியங்களை முழுவதுமாய் அழிக்கும் செயல் எது ? வடலூர் வள்ளலாரின் பார்வை:

கதியற்ற பிராணிகளின் பரிதாபக் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தினை உட்கொள்வது பெரும் பாவத்தினை சேர்ப்பதோடு அது வரை சேர்த்துள்ள புண்ணியங்களையும் முழுவதுமாக அழித்தொழித்து விடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளல் பெருமானார். புலால் உட்கொள்வதை இக்கண முதல் துறப்பதாக சபதமேற்போம்! நலமெலாம் பெற்றுய்வு பெறுவோம்!

(சமாதி வற்புறுத்தல் - பாடல் 10: திருவருட்பா: ஆறாம் திருமுறை):
புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
கருங்கடலில் போக விட்டீர்
கொலைத் தொழிலில் கொடியீர் நீர் செத்தாரைச்
சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
கலக்கம் எலாம் கடவுள் நீக்கித்
தலைத்தொழில் செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
புரிகுவது இத்தருணம் தானே!!

No comments:

Post a Comment