திருக்குறளில் புலால் மறுத்தல் (வள்ளுவத்தைப் பின்பற்றுதலே வள்ளுவரைப் போற்றுதல்):

திருவள்ளுவனார் பிரதானமாக முன்னிறுத்தும் 'கொல்லாமை; புலால் மறுத்தல்' எனும் தர்மங்களை ஒருசிறிதும் உணராமல்; பின்பற்றாமல், வள்ளுவருக்கு சிலைகள் வைப்பது; பல்வேறு இந்திய; உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பொழுது 'உலகப் பொதுமுறையடா எங்கள் குறள்' என்று முழங்குவது; பிற நாடுகளிலுள்ள திருவள்ளுவர் சிலைகள் குறித்துப் பெருமையுடன் பகிர்வது; திருவள்ளுவர் எங்கள் முப்பாட்டன் என்று திமிர் கொள்வது என்று இவைகளோடு மட்டுமே நாம் நிறைவுற்று விடுகின்றோம். வள்ளுவமாகிய கொள்கைகளைப் பின்பற்றுவதே வள்ளுவனாரைப் போற்றும் முறையான வழியென்று உணர்ந்துத் தெளிவோம், இன்றே பிற உயிர்களின் கடும் வேதனையின்றும் தோன்றும் மாமிசத்தினை உட்கொள்வதில்லை என்று சபதமேற்போம், வள்ளுவம் பேணுவோம்!! சிவ சிவ!!!

No comments:

Post a Comment